டப்பா உணவுகளில் அடுத்த அவதாரம்
நல்லது தான்; மிஞ்சினால் கெட்டது
"தயிர்...தயிர்...வேணுமா அம்மா...' என்று இப்போதும் கூட தெருக்களில் பானையில் தயிர் கொண்டு வந்து விற்பது கிராமங்களை ஒட்டிய சில நகரங்களில் இருக்கிறது. அந்த தயிர் வாங்கி சாப்பிட் டிருக்கீங்களா... அவ்வளவு கட்டியாக இருக்கும்; ஒரு வித சுவை உங்களை ஈர்க்கும்.
சென்னை போன்ற நகரங்களில் பானை தயிர் விற்பனை எல்லாம் போய்விட்டது; "மால்'களில் மட்டுமல்ல, சாதா கடைகளிலும் பாக்கெட் தயிர், பால் பொருட்கள் தான் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், மேற்கத்திய அவதாரம் தான் " ப்ரோ பயோட்டிக்' உணவுப்பொருட்கள்; பால், பால் பொருட்கள், ஐஸ்கிரீம்களாகத்தான் இந்த வகை டப்பா உணவுப்பொருள் சில ஆண்டு முன் நுழைந்தது. ஆனால், இப்போது இது பலவகை உணவுகளில் உலா வரப்போகிறது. ஆம், வெளிநாட்டு நிறுவனங்கள், இப்படிப்பட்ட டப்பா உணவுகளை இந்தியாவில் குவிக்க தயாராகிவிட்டன.
நல்லதா - கெட்டதா
"ப்ரோ பயோட்டிக்' உணவு நல்லதா? கெட்டதா? ஒரு வகையில் நல்லது தான்; ஆனால், மிஞ்சினால் கெட்டதும் கூட என்பது தான் நிபுணர்கள் கருத்து. "ப்ரோ ப்யோட்டிக்' என்பது, உயிருள்ள பாக்டீரியா கலந்த உணவு; மனித உடலுக்கு நல்லது தான்; எளிதில் ஜீரணிக்க உதவும்; எந்த பாதிப்பையும் தராது; நாம் அருந்தும் பாலில், "அசிடோபிலஸ்' என்ற பாக்டீரியா உள்ளது. இதுபோல, பால் பொருட்கள் முதல் காய்கறி, பழங்கள் வரை உயிருள்ள பாக்டீரியாக்கள் உள்ளன' என்கின்றனர்.
இன்னும் சொல்லப்போனால், இட்லி, தோசை , அடை மாவு போன்ற அரைத்து வைக்கும் மாவுகளில் உள்ள புளிக்கும் "ஈஸ்ட்' போன்றவையும் ஒரு வகை "ப்ரோ பயோட்டிக்' தான் என்பதும் இவர்கள் கருத்து.
மொறுமொறு வரை
இளைய தலைமுறையினரை வெகுவாக கவர்ந்துள்ள பாக்கெட் "மொறுமொறு'க்களுடன் இப்போது கொடிகட்டிப்பறப்பது "ப்ரோ பயோட்டிக்' பாக்கெட் உணவுகள் தான். பால், தயிர், இனிப்பு தயிரான யோகர்ட் போன்றவையும் இவர்களின் குளிர்பான பட்டியலில் சேர்ந்து விட்டது.
இந்தியாவில் " ப்ரோ பயோட்டிக்' நுழைந்து ஐந்தாண்டாகிவிட்டது என்றாலும், அதன் அளவு மீறிய வர்த்தக ஊடுருவல், இப்போது தான் மத்திய அரசை அசைத்துள்ளது. வெளிநாட்டு மருந்துகளுக்கு கட்டுப்பாடு உள்ளது போல, இதற்கும் கட்டுப்பாடு கொண்டு வர உள்ளது.
ஐரோப்பிய நிறுவனங்கள், இந்தியாவில் "ப்ரோ பயோட்டிக்'குகளுக்கு அதிக மவுசு இருப்பதை அறிந்து மொறு மொறு பொருட்கள் வரை தயாரித்து விற்பனை செய்ய தயாராகி வருகிறது. கோதுமை உட்பட சில தானியங்களில் "ப்ரோ பயோட்டிக்' சிற்றுண்டிகளை பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்வதே இவற்றின் நோக்கம்.
கல்லீரலை பாதிக்கும்
கல்லீரலில் பாதிப்பு வந்தால் அதற்கு பெயர் "பான்கிரியாட்டிஸ்' என்பது. அதிக மது குடித்தால் வரும் இது. இந்த பாதிப்பு அதிகமானால், சிறுநீரகத்தை பாதிக்கும்; சர்க்கரை நோயை அதிகரிக்கும்.
"ப்ரோ பயோட் டிக்' உணவுகளை மிதமாக சாப் பிட்டு வந்தால் அதனால், உடலுக்கு நல்லது தான். மிஞ்சினால் கல்லீரல் பாதிப்பு அதிகரிக்குமாம். ஐரோப்பிய நாடுகளில் பலர் உயிரை பறித்துள்ளது இந்த பாதிப்பு. இப்படிப்பட்ட உணவு தான் இப்போது இந்தியாவில் பல வகையில் விஸ்வரூபம் எடுக்க தயாராக உள்ளது.
கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க, அதில் பாயும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சீராக இருக்க வேண்டும். அதிக "ப்ரோ பயோட்டிக்' உணவுகளால் அதிக பாக்டீரியா சேர்ந்தால், அதுவே கெட்டதாகி விடுகிறது. ஆக்சிஜன் அளவை மேலும் குறைக்கிறது என்று நிபுணர்கள் சொல்கின்றனர்.
பாக்கெட் உணவில் வாழலாமா
பாக்கெட் உணவுகளில் மட்டுமே அன்றாடம் உணவுத் தேவையை கவனித்துக் கொள்ளலாம் என்ற மனப்போக்கு, இளைய தலைமுறையினரிடம் உள்ளது. அதனால் தான், அதிக அளவில் பாக்கெட் உணவுகளை வெளிநாட்டு நிறு வனங்கள், இங்கு கொட்டுகின்றன; அவை விற்பனையும் ஆகின்றன. எதுவும் மிஞ்சினால் விஷம் தான். அதை உணர்ந்து, "படித்த' இளைய தலைமுறையினர், பாக்கெட் உணவுகளில் உஷாராக இருந் தால் அவர்கள் உடல் நலம் பாதுகாக்கப்படும்; இல்லையேல், சர்க்கரை, இதய பாதிப்பு மட்டுமல்ல, கல்லீரல் போன்றவையும் பாதிக்கப்பட்டு,பெரும் சுகாதார கேட்டை சந்திக்க நேரிடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆக, இளைய தலைமுறையினரே, பாக்கெட் உணவுகளை வாங்கும் போதே யோசியுங்கள்; பாக்கெட் ட்ரிங்குகளை வாங்குவதை விட,பிரஷ் ஜூஸ் சாப்பிடும் போக்கை பின்பற்றுங்கள்; உங்கள் படிப்பும், திறமையும் உங்களுக்கும் உதவும்; நாட்டுக்கும் உதவும்.
மேற்கத்திய மக்களை பாதித்த பாக்கெட் உணவுகள், உங்கள் உயிருக்கு ஆபத்தாக இருக்க வேண்டுமா...?
0 comments:
Post a Comment