அடைபிரதமன்
தேவையான பொருட்கள்: அடை (எல்லா டிபார்ட்மென்ட் கடைகளிலும் அடைபிரதமனுக்கான அடை என்று கேட்டால், பீட்ஸா பேஸ் போல ரெடிமேடாகவே கிடைக்கும் பச்சரிசியினாலான இந்த அடை) - 300 கிராம், வெல்லம் - 750 கிராம், தேங்காய் - 4, துருவி, நெய்யில் வதக்கிய தேங்காய் - முக்கால் கப், சுக்கு (பொடித்தது) - தேவையான அளவு, சீரகம் (பொடித்தது) - கால் டீஸ்பூன், ஏலக்காய் (பொடித்தது) - 5, நெய் - 3 டேபிள்ஸ்பூன், ஜவ்வரிசி - 100 கிராம், கிஸ்மிஸ் பழம், முந்திரி - சிறிதளவு
செய்முறை: கொதித்த நீரில் அடையைப் போட்டு உடனே எடுத்து, பிறகு பச்சைத் தண்ணீரில் போட்டு எடுத்து வைக்கவும். வெல்லத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து பாகு செய்து கொள்ளவும். நான்கு தேங்காய்களையும் அரைத்து 1-ம் பால், 2-ம் பால், 3-ம் பால் எடுக்கவும். ஜவ்வரிசியை தனியே வேக வைக்கவும்.
அடையை நெய்யில் வதக்கி, வெல்லப்பாகையும் ஊற்றி, ஒரு கொதி வந்தவுடன், ஸ்டவ்வை 'சிம்'மில் வைத்து 3-ம் பால் ஊற்றி, வேக வைத்த ஜவ் வரிசியை அதில் போட்டுக் கொதிக்க விடவும். அதை நன்றாகக் கிளறிக்கொண்டே இருக்கவும். பிறகு, 2-ம் பால் ஊற்றி ஒரு கொதி விட்டு, பொடித்த ஏலக்காய், சுக்கு, சீரகம் சேர்த்து, 1-ம் பாலையும் சேர்த்து சூடு ஏறியவுடன் இரண்டு நிமிடங்கள் பொறுத்திருந்து இறக்கவும். வதக்கிய தேங்காய் துருவலுடன், வறுத்த கிஸ்மிஸ் பழம், முந்திரிப் பருப்பு போன்றவற்றையும் போட்டு இறக்கவும். அசத்தும் அடைபிரதமன் ரெடி!
அடைபிரதமனை ஸ்வாஹா செய்துவிட்டு ''பின்னிட்டீங்க!'' என்று ஐஸ் வைத்த நம்மிடம், ''கேரள சமையலை பொறுத்தவரைக்கும் தேங்காயின்றி அணுவும் அசையாது. இந்த மண்ல தேங்காய் அமோகமா விளைஞ்சு, ஈஸியா கிடைக்கறது மட்டும் காரணமில்ல. தேங்காய், தேங்காய் எண்ணெய்னு சமையல்ல சேர்த்துக்கிட்டா... ஸ்கின்னுக்கு நல்ல டோன் கிடைக்கும்'' என்று 'ஆன் தி வே'யில் ஒரு மருத்துவக் குறிப்பையும் அள்ளிவிட்ட சுமதி சேச்சி, ''நான் அடுத்து சமைக்கப்போறது மத்தன் எரிசேரி'' என்றபடி தயாரானார்.
மத்தன் எரிசேரி
தேவையான பொருட்கள்: தேங்காய் (துருவியது) - 1/2 மூடி, தட்டாம் பயிறு - 1 கப், பூசணிக்காய் (மத்தன்)-1 கப் (நறுக்கியது), வெல்லம் - 1 டீஸ்பூன்,தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு, மிளகாய்ப் பொடி - 1/4 டீஸ்பூன், மிளகுப் பொடி - மிகச் சிறிதளவு, காய்ந்த மிளகாய்- சிறிதளவு, கடுகு, கறிவேப்பிலை - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு.
அரைக்க வேண்டிய பொருட்கள்: தேங்காய் - 1/2 மூடி, பச்சை மிளகாய் - 9, சீரகம் - 1 டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 3 (எல்லாவற்றையும் தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்).
செய்முறை: தட்டாம் பயிறுடன் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக வறுக்கவும். வறுத்தவுடன் குக்கரில் 5 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும். அதில் அரசாணிக்காய், வெல்லம், உப்பு, மிளகாய்ப் பொடி போட்டு வேக வைக்கவும். வெந்தவுடன், அரைத்த மசாலாவையும் இதனுடன் சேர்க்கவும். கொதித்து வரும்போது மிளகுப் பொடியை தூவி இறக்கவும். பிறகு, கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இறக்கி வைத்திருக்கும் தட்டாம் பயிறு மசாலாவுடன் சேர்க்கவும். இதுதான் 'மத்தன் எரிசேரி' உருவாகும் கதை!
''நேந்திரம்பழ பாயசம் செய்றதுல ரேஷ்மிதான் எக்ஸ்பெர்ட்!'' என்ற சுமதி சேச்சி, ரேஷ்மியை நமக்கு அறிமுகப்படுத்த. ''நோட் பண்ணிக்கோங்க'' என்று நேந்திரம் பழத்தை உரிக்க ஆரம்பித்தார் ரேஷ்மி சேச்சி.
நேந்திரம்பழ பாயசம்
தேவையான பொருட்கள்: நேந்திரம் பழம் - 1 கிலோ, தண்ணீர் -3 கப், வெல்லம் - 1/2 கிலோ, நெய் - 1/2 கப். பால் - 1 லிட்டர், தேங் காய்(நறுக்கியது) - 1 கப், ஏலக்காய் (பொடித்தது) - 1 டீஸ்பூன்
செய்முறை: நேந்திரம் பழத்தை துண்டு துண்டாக நறுக்கி நெய் ஊற்றி வதக்கவும். வெல்லத்தை தூளாக்கி, இதனுடன் சேர்த்து வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பிறகு பாலை நன்றாக சுண்டக் காய்ச்சி, அதை பழம், வெல்லக் கலவையுடன் சேர்த்து சில கொதிகள் விட்டு இறக்கவும். நறுக்கிய தேங்காய் துண்டுகளை நெய்யில் வதக்கி இதனுடன் சேர்க்கவும். கடைசியாக ஏலக்காயையும் சேர்த்தால்... பாயசம் தயார்!
இந்த தீபாவளிக்கு வித்தியாசமாக, வெரைட்டியாக அசத்துங்கள் உங்க விருந்தாளிகளை... கேரள ரெசிபிசுடன்!

aas

sas

தேவையானவை: கம்பு மாவு - ஒரு கப், வெல்லம் - அரை கப், தேங்காய் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் கம்பு மாவை போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். ஆறியதும் உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசிறி... ஆவியில் வேக விட்டு எடுக்கவும். பொடித்த வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி பாகு காய்ச்சவும். பாகு கரைசலில் வறுத்து, வேக வைத்து, ஆற வைத்த கம்பு மாவு, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி உருண்டைகளாக உருட்டவும். உருண்டைகளை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்தக் கொழுக்கட்டை.


தேவையானவை: தினை மாவு - ஒரு கப், கருப்பட்டி - அரை கப், தேங்காய் துண்டுகள் - கால் கப், சுக்குப்பொடி - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் தினை மாவைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசிறி ஆவியில் வேக வைத்து ஆற விடவும். பொடித்த கருப்பட்டியை தண்ணீரில் கரைத்து வடிகட்டி, பாகாகக் காய்ச்சவும். நறுக்கிய தேங்காய் துண்டுகள், சுக்குப்பொடி சேர்த்துக் கலக்கி, ஆற வைத்துள்ள கம்பு மாவில் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டிக் கொள்ளவும். இதேபோல் ஒவ்வொரு உருண்டையாக உருட்டி ஆவியில் வேக விட்டு எடுக்க... தினை மாவு கொழுக்கட்டை ரெடி!


தேவையானவை - மேல் மாவுக்கு: பச்சரிசி மாவு - 2 கப், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
பூரணத்துக்கு: பாசிப்பயறு - ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். அதில்... உப்பு, நல்லெண்ணெய் சேர்க்கவும். கொதிக்கும்போதே, மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி, கட்டியில்லாமல் நன்கு கிளறவும். மாவு கெட்டியானதும் இறக்கி, 10 நிமிடம் ஈரத் துணியால் மூடி வைக்கவும்.
பாசிப்பயறை 6 மணி நேரம் ஊற வைத்து, பின் வேக விடவும். வெந்ததும் தண்ணீரை வடித்து, உப்பு, மிளகாய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும். பூரணம் ரெடி!
தயார் செய்து வைத்துள்ள மேல் மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து, கிண்ணம் போல் செய்து கொள்ளவும். அதனுள் பாசிப்பயறு பூரணத்தை வைத்து மூடவும். இதேபோல் ஒவ்வொன்றையும் தயார் செய்து கொள்ளவும். அவற்றை ஆவியில் வேக விட்டு எடுத்தால்... பாசிப்பயறு கொழுக்கட்டை தயார்!
வேக வைத்த பயறுக்கு பதிலாக முளைகட்டிய பயறையும் பயன்படுத்தலாம்; இந்த கொழுக்கட்டையை காராமணியிலும் செய்யலாம்.


தேவையானவை: பச்சரிசி மாவு, கருப்பட்டி - தலா ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: கருப்பட்டியைப் பொடித்து தண்ணீரில் கரைத்து கொதிக்கவிடவும். அதனை வடிகட்டி ஆறவிடவும். அந்தப் பாகில் தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், பச்சரிசி மாவு ஆகியவற்றை சேர்த்துக் கிளறி கெட்டியாகப் பிசையவும்.
அந்த மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து, எண்ணெய் தடவிய உள்ளங்கையில் வைத்து உருளைகளாகப் பிடிக்கவும். இதேபோல் ஒவ்வொன்றையும் தயார் செய்யவும். அவற்றை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
தேங்காய் துருவலுக்குப் பதிலாக, தேங்காயை சிறு சிறு துண்டுகளாக்கியும் சேர்க்கலாம்

சோயாபீன்ஸ் தோசை
தேவையானவை: சோயாபீன்ஸ் - ஒரு கப் (10 மணி நேரம் ஊற வைக்கவும்), புழுங்கல் அரிசி - ஒரு கப் (ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்), வெந்தயம் - ஒரு டீஸ்பூன் (அரிசியுடன் சேர்த்து ஊற வைக்கவும்), உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஊறிய சோயாபீன்ஸை அரைக்கவும். பிறகு... அரிசி-வெந்தயத்தை அரைத்துக் கொள்ளவும். இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து, உப்பு சேர்த்து ஒரு இரவு முழுவதும் புளிக்க வைக்கவும். சூடான தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை விட்டு தோசைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.
இதற்குத் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி சிறந்த காம்பினேஷன்!

ஜவ்வரிசி தோசை
தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப், புழுங்கல் அரிசி - ஒன்றரை கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கியது), இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது), கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: ஜவ்வரிசியைக் கழுவி, தண்ணீரை நன்கு வடிகட்டி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். அவ்வப்போது இதனைக் கிளறினால்தான் முழுமையாக ஊறும். புழுங்கல் அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, நன்கு கழுவி அரைக்கவும். அரிசி நன்கு அரைபட்டவுடன்... ஜவ்வரிசி, உப்பு சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும். மாவை இரண்டு மணி நேரம் புளிக்க விடவும். கடாயில் எண்ணெய் விட்டு... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, மாவில் கொட்டிக் கலக்கவும்.
தோசைக் கல் சூடானதும் எண்ணெய் தேய்த்து, மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து, வெந்தவுடன் எடுத்துப் பரிமாறவும்.
புதினா சட்னியுடன் சாப்பிட்டால், டேஸ்ட் கூடுதலாக இருக்கும்!

சோள தோசை
தேவையானவை: வெள்ளைச் சோளம், பச்சரிசி - தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு - இரண்டு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வெள்ளைச் சோளம், பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, தனித்தனியாக அரைக்கவும். பிறகு, எல்லா மாவையும் ஒன்றாக கலந்து, உப்பு சேர்க்கவும். இந்த மாவை, 10 முதல் 12 மணி நேரம் வரை புளிக்க வைக்கவும். சூடான தோசைக் கல்லில், எண்ணெய் தேய்த்து, ஓரத்தில் இருந்து உள்பக்கம் வரும் வகையில் மாவை விடவும். இருபுறமும் எண்ணெய் விட்டு, திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுக்கவும்.
இதற்குத் தொட்டுக்கொள்ள காய்கறி குருமா சூப்பராக இருக்கும்!

sd

sdsd

fgfg

fgfg

ஸ்டஃப்டு டமாட்டர்
தேவையானவை: தக்காளி - 10, பொட்டுக்கடலை - 50 கிராம், வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - 50 கிராம், தேங்காய் துருவல் - கால் கப், நறுக்கிய கொத்தமல்லி, புதினா, மிளகுத்தூள், சீரகத்தூள், பிளாக் சால்ட் - சிறிதளவு
செய்முறை: பொட்டுக்கடலை, வேர்க்கடலை, தேங்காய் துருவல், மிளகுத்தூள், சீரகத்தூள், பிளாக் சால்ட் எல்லவற்றையும் மிக்ஸியில் போட்டு கொஞ்சம் நீர் விட்டுக் கெட்டியாக அரைக்கவும். தக்காளியை நன்கு கழுவி, அதன் மேல் பக்கத்தில் கீறவும். அதற்குள் அரைத்த கலவையை வைத்து, மேலே நறுக்கிய கொத்தமல்லி, புதினா தூவி பரிமாறவும்.
குறிப்பு: இதை அடிக்கடி செய்து சாப்பிட ரத்த சோகை விலகி, இளமை மேம்படும். உடல் தொப்பை, கொலஸ்ட்ரால், அதிக உடல் எடையை சரிசெய்யும்.

இஞ்சி ஜாம்
தேவையானவை: தேன் - அரை கிலோ, இஞ்சி - அரை கிலோ, பேரீச்சை - 250 கிராம், பனங்கற்கண்டு - 200 கிராம்.
செய்முறை: இஞ்சியை தோல் நீக்கிக் கழுவி, பொடிப் பொடியாக நறுக்கவும். ஒரு பாட்டிலில் தேன் விட்டு அதில் நறுக்கிய இஞ்சியை ஊற வைக்கவும். பேரீச்சையைக் கழுவி, கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கவும். நறுக்கிய பேரீச்சை, பனங்கற்கண்டு ஆகியவற்றை தேனில் ஊறும் இஞ்சியுடன் கலக்கவும். அந்த பாட்டிலின் வாயை மெல்லிய காட்டன் துணியால் கட்டவும். இதனை, ஒருவாரம் வெயிலில் வைத்து எடுத்து, சாப்பிடவும்.
குறிப்பு: வயிற்று வலி, வயிற்று பூச்சி, ஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், சளி, இருமல் தொல்லைகளுக்கு சிறந்தது இஞ்சி ஜாம்.

தக்காளி\அவல் ஜீமிக்ஸ் மீல்ஸ்
தேவையானவை: அவல் - 600 கிராம், தக்காளி - 2 கிலோ, தேங்காய் துருவல் - ஒரு கப், வெங்காயம் - 2, மிளகுத்தூள், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், முந்திரி - 100 கிராம், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, பூண்டு - 3 பல், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பிளாக் சால்ட் - தேவையான அளவு.
செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தம் செய்து.. தண்ணீர் விட்டுக் கழுவி வடிகட்டவும். தக்காளியை நன்றாகக் கழுவி மிக்ஸியில் போட்டுக் கெட்டியாக அரைத்து... சாறு எடுத்துக் கொள்ளவும். அல்லது தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கழுவிய அவல், தக்காளிச் சாறு அல்லது தக்காளித் துண்டுகள், தேங்காய் துருவல், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, நசுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு மிளகுத்தூள், சீரகத்தூள், முந்திரி, பிளாக் சால்ட் சேர்த்துக் கலந்து பரிமாறவும். இதற்குத் தொட்டுக் கொள்ள பச்சடி ஏற்றது.
குறிப்பு: மதிய உணவாக இதனை எடுத்துக் கொள்ளலாம். குறைந்த கலோரி உணவு இது.

இயற்கை ரசம்
தேவையானவை: தக்காளி - அரை கிலோ, ரசப்பொடி - ஒன்றரை டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, தோலுரித்த பூண்டு - 5 பல், பிளாக் சால்ட் - தேவையான அளவு.
செய்முறை: தக்காளியை நன்கு கழுவி, அரைத்து சாறு எடுத்து தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, தோலுரித்த பூண்டு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த கலவையுடன் ரசப்பொடி, சீரகத்தூள், மிளகுத்தூள், பிளாக் சால்ட் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை தக்காளிச் சாறுடன் சேர்த்து மீண்டும் ஒருமுறை கலக்க... இயற்கை ரசம் ரெடி!
குறிப்பு: தக்காளிக்குப் பதிலாக எலுமிச்சைச் சாறு அல்லது புளிக்கரைசல் உபயோகித்தும் செய்யலாம்.

பீட்ரூட் ஊறுகாய்
தேவையானவை: பீட்ரூட் துருவல் - ஒரு கப், இஞ்சி - 100 கிராம், எலுமிச்சம்பழம் - 10, இந்துப்பு - தேவையான அளவு.
செய்முறை: இஞ்சியைத் தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சம்பழத்தை நறுக்கி, கொட்டை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளவும். இரண்டு சாறுகளையும் ஒன்றாகக் கலந்து, அதில் பீட்ரூட் துருவல், இந்துப்பு சேர்த்துக் கலந்து... 10 நிமிடம் ஊற வைக்கவும். இதே முறையில் கேரட்டிலும் செய்யலாம்.
குறிப்பு: இந்த ஊறுகாய்... ஜீரணக் கோளாறு, வயிற்று வலி, வயிற்றுப் பொருமல் போன்ற உபாதைகளை சரிசெய்யும். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் என்பது கூடுதல் சிறப்பு.

கொத்தமல்லி\அவல் மிக்ஸ் மீல்ஸ்
தேவையானவை: அவல் - 600 கிராம், தேங்காய் துருவல் - அரை கப், கொத்தமல்லி - ஒரு கட்டு, கறிவேப்பிலை - இரண்டு கைப்பிடியளவு, வெங்காயம், குடமிளகாய் - தலா 2, மிளகுத்தூள், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், முந்திரி - 100 கிராம், இந்துப்பு - தேவையான அளவு.
செய்முறை: அவலை கல் நீக்கிச் சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிக்கவும். சுத்தம் செய்த கொத்தமல்லி, கறிவேப்பிலையை மிக்ஸியில் போட்டு அரைத்து... கெட்டியாக சாறு எடுக்கவும். குடமிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
கழுவிய அவலுடன் அரைத்தெடுத்த கொத்தமல்லி - கறிவேப்பிலை சாறு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் முந்திரி, நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், மிளகுத்தூள், சீரகத்தூள், தேங்காய் துருவல், இந்துப்பு சேர்த்து, நன்கு கலந்து பரிமாறவும்.

நேச்சுரல் பிரியாணி
தேவையானவை: அரிசி அவல் - 250 கிராம், முளை கட்டி, உலர வைத்த கோதுமை - 250 கிராம், வெங்காயம் - 2, கேரட், தக்காளி - தலா 3, முட்டைகோஸ், பீன்ஸ், வெண்பூசணி, புடலங்காய், சௌசௌ - தலா 100 கிராம், வெள்ளரி - 2, உருளைக்கிழங்கு, குடமிளகாய் - தலா 1, மாதுளை முத்துக்கள் - அரை கப், முளைகட்டிய பாசிப்பயறு - 50 கிராம், முளை கட்டிய வேர்க்கடலை - 100 கிராம், முளைகட்டிய எள் - 50 கிராம், முந்திரி, திராட்சை - தலா 100 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள் தலா ஒரு டீஸ்பூன், பட்டை - 2, கிராம்பு - 3, ஏலக்காய் - 4, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு- 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு கப், இஞ்சி - 50 கிராம், இந்துப்பு - தேவையான அளவு.
செய்முறை: அவலை கல் நீக்கி சுத்தம் செய்து, மிக்ஸியில் ரவையாக அரைக்கவும். முளைகட்டி உலர வைத்த கோதுமையையும் ரவையாக அரைக்கவும். ரவையாக அரைத்த அவல், கோதுமையை தண்ணீரில் கழுவி, தண்ணீரை வடித்து... ஊற வைக்கவும். இஞ்சியைத் தோல் சீவி பொடிப் பொடியாக நறுக்கவும். முந்திரி, திராட்சையைக் கழுவி 10 நிமிடம் ஊற விடவும்.
ஒரு பாத்திரத்தில், ஊற வைத்த ரவையாக அரைத்த அவல், கோதுமையுடன் நறுக்கிய காய்கறிகள், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, பொடிப் பொடியாக நறுக்கிய இஞ்சி, முளை கட்டிய தானியங்கள், தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை, மாதுளை முத்துக்கள், மிளகுத்தூள், சீரகத்தூள், பட்டை, கிராம்பு, ஏலக்காய், எலுமிச்சைச் சாறு, இந்துப்பு அனைத்தையும் ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு கிளற... நேச்சுரல் பிரியாணி ரெடி!

ஸ்டஃப்டு பேரீச்சை
தேவையானவை: பேரீச்சை - அரை கிலோ, முந்திரி - 250 கிராம், தேன் - 200 கிராம்.
செய்முறை: முந்திரியை தேனில் ஒரு நாள் முழுவதும் ஊற விடவும். பேரீச்சையைக் கழுவி உலர விடவும். பிறகு, நீளவாக்கில் கீறி கொட்டையை மெதுவாக நீக்கி விடவும். கொட்டை நீக்கப்பட்ட பேரீச்சைக்குள் தேனில் ஊற வைத்த முந்திரியை ஸ்டஃப் செய்யவும். இதுபோல் ஒவ்வொரு பேரீச்சை யிலும் ஸ்டஃப் செய்ய வும்.
குறிப்பு: ரத்தசோகையை நீக்கும் நல்ல மருந்து இது. உடல் எடையை அதிகரிக்க விரும்புவர்கள் இதனை தினமும் சாப்பிடலாம்.

வெஜிடபிள் இட்லி
தேவையானவை: அவல் - அரை கிலோ, முளைகட்டி, உலர வைத்த கோதுமை - 200 கிராம், தேங்காய் துருவல் - ஒன்றரை கப், பிளாக் சால்ட் - தேவையான அளவு.
செய்முறை: முளைகட்டி, உலர வைத்த கோதுமையை மிக்ஸியில் அரைக்கவும். அவலை கல் நீக்கி சுத்தம் செய்து, தண்ணீரில் ஊற விடவும். ஊறியதும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கோதுமை, அவலுடன் தேங்காய் துருவல், பிளாக் சால்ட் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். இட்லித் தட்டில் மெல்லிய துணி விரித்து, இந்த மாவை இட்லி போல் விடவும். 10 நிமிடம் கழித்து... துணியிலிருந்து மெதுவாக இதனைப் பிரித்தெடுக்க... நேச்சுரல் இட்லி தயார். இதனுடன் காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம்.
குறிப்பு: இதற்குத் தொட்டுக்கொள்ள இயற்கை சாம்பார் ஏற்றது.

2 ஆழாக்கு முருங்கைக் கீரையை உப்பு போட்ட தண்ணீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 3 பெரிய வெங்காயம், 4 பச்சை மிளகாய் இவற்றை பொடிப் பொடியாக நறுக்கி இரண்டையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

லு லிட்டர் தண்ணீரை உப்பு போட்டு கொதிக்க விடவும்.இதில் ஒரு ஆழாக்கு அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சரியான முறையில் கிளறவும். இதே கரைசலில் முருங்கைக்கீரையையும் சேர்த்து கிளறிக்கொண்டே வரவேண்டும்.கூழ் பதத்திற்கு இந்த கரைசல் வரும் வரை கிளற வேண்டும்.பின்னர் அரை டீஸ்பூன் பெருங்காயத் தூளை போட்டு சிறு சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும்.

வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் எண்ணெய் தடவி இந்த உருண்டைகளை அடைகளாகத் தட்டி தோசைக்கல்லில் போட்டு இரு புறமும் வேகவிடவும்.




ஒரு கப் வாழைப்பூவை சுத்தம் செய்து வேகவைத்துக் கொள்ளவும். லு கப் கடலைப்பருப்பை ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், கால் டீஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட், நறுக்கிய 2 பச்சை மிளகாய், உப்பு இவையனைத்தையும் கடலைப்பருப்பு, வாழைப்பூவுடன் சேர்த்துக் கொள்ளவும். தேவையெனில் பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக்கிக் கொண்டு இட்லிப் பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும்.

(ஆவியில் வேக வைத்து எடுப்பதால் B.P. உள்ளவர்களுக்கு நல்ல ஆரோகியமான உணவு.)






* வெங்காயம்

* பூண்டு

* வாழைத்தண்டு

* வாழைப்பூ

* சுரைக்காய்

* பீர்க்கங்காய்

* பார்லி

* சீரகம்

* வெந்தயம்

* பொரிக்காத வேகவைத்த மீன்

* வெள்ளைத்தாமரை

* மருதமரப் பட்டை

* மனம் விட்டுச் சிரிப்பது

hi

hjhjh

hi

hi

தேவை

கொய்யாக்காய் துண்டங்கள் -1கப், வெந்தயம் - 1 தேக்கரண்டி, மிளகாய் வற்றல் பொடி - 1 தேக்கரண்டி, உப்பு - தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் - அரை கப், கடுகு - அரை தேக்கரண்டி

செய்முறை

பழம் கண்டிப்பாக கூடாது. செங்காயாக இருக்கும் கொய்யாக்காயின் நடுப்பகுதியில் இருக்கும் விதைகளை நீக்கவும். மீதி சதைப்பகுதியை சிறு துண்டங்களாக்கவும். வெந்தயத்தை சிவக்க வறுத்து பொடிக்கவும். மிளகாய் வற்றலை வறுத்து பொடிக்கவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி கடுகை வெடிக்க விடவும். அத்துடன் கொய்யாக்காய் துண்டங்களைச் சேர்த்து வதக்கவும். வெந்தயப்பொடி, உப்பு, பெருங்காயப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து கலந்து, ஆறியபிறகு கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைக்கவும்.

பலன்கள்

வயிற்றைச் சுத்தமாக்கும். மயக்கம், சோர்வு ஆகியவைகளை நீக்கும். ஆண்களின் ஆண் தன்மையை மேம்படுத்தும். விந்தணுக் குறைபாடு உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டியது கொய்யா



ஏழைகளுக்கு உதவும் டாக்டர் கோஷ் அறக்கட்டளை

நம் உடலில் இதயத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் அளிக்கிறோமோ, அதே அளவு முக்கியத்துவம் பெற்றவை மூளை மற்றும் நரம்பு மண்டலங்கள். "நியூராலஜி' எனப்படும் நரம்பியல் மருத்துவத் துறையில் சென்னையிலும், கோல்கட்டாவிலும் சேவை செய்து வருகிறார் டாக்டர் சித்தார்த்த கோஷ். வேலூர் சி.எம்.சி.,யில் மேற்படிப்பை முடித்த அவர், 18 ஆண்டுகளாக சென்னை மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். தற்போது, நந்தனத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிகிறார். ஆண்டுக்கு 600க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். பல்லாயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு, மூளையில் உள்ள குறைபாடுகளை நீக்கி நோயாளிகளை குணப்படுத்தி வருகிறார். ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காக இலவச கிளினிக்குகளை "டாக்டர் கோஷ் அறக்கட்டளை' பெயரில் நடத்தி வருகிறார்.



சென்னை பள்ளிக்கரணையில் கே.பி., ஆயில் மில் அருகிலும், கோல்கட்டாவில் பேக் பஜாரிலும் இந்த கிளினிக்குகள் செயல்பட்டு வருகின்றன. கிளினிக்கிற்கு வரும் ஏழை நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டால், அவர்களை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்து தனது சொந்த செலவில், அறுவை சிகிச்சைக்கு கூட கட்டணம் பெறாமல் சிகிச்சை அளித்து வருகிறார்.அப்பல்லோ மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய அறை வாடகை உள்ளிட்ட இதர மருந்து கட்டணங்களை மட்டும் செலுத்தினால் போதும்.



இந்த வகையில் குறைந்த செலவில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சேவை குறித்து டாக்டர் சித்தார்த்த கோஷ் கூறியதாவது: ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காக எங்கள் அறக்கட்டளை மூலம் எங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறோம். இதுவரை 15 லட்சம் ரூபாய் வரை உதவி செய்துள்ளோம். மருத்துவ மாணவர்களுக்கு படிப்பு உதவிகள் செய்து வருகிறோம்.



அறக்கட்டளை சார்பில் புதிய கிளினிக்குகள் அமைக்க ஆர்மீனியன் சர்ச் ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளது. எங்களது அறக்கட்டளைக்கு அரசும் உதவினால் மகிழ்ச்சி அடைவோம்.இந்தியாவில் பெருநகரங்களில் உள்ள ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்படும் மிகவும் சிக்கலான, "ஸ்கல் பேஸ்டு நியூரோ சர்ஜரி'களை செய்துள்ளேன். சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றுவோர் அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருப்பதால் அவர்களுக்கு கழுத்து வலி, இடுப்பு வலி ஏற்படுகிறது. அதிக நேரம் உட்காருவதை தவிர்க்க வேண்டும். கழுத்து வலி அதிகரித்து கைகளுக்கு வலி பரவினால் நரம்பியல் டாக்டரை பார்ப்பது அவசியம்.



இவ்வாறு டாக்டர் சித்தார்த்த கோஷ் கூறினார்.



தொடர்புக்கு: கிருஷ்ணகுமார்; போன்: 99400 22925


அசட்டையாக இருப்பவரா நீங்க?




இனி உஷார்

"சே, இவ்ளோ தானா... கண்டிப்பா இனி பாலோ பண்ணனும்...ன்னு நினைப்பீர்கள். ஆனால், அசட்டையாக இருந்து விடுவீர்கள், இனி அப்படி வேண்டாமே. கொழுப்பு எவ்ளோ: ஆண்களின் மொத்த எடையில், 12ல் இருந்து 18 சதவீதம் வரை கொழுப்பு இருக்கலாம்; அது போல பெண்களுக் குள்ள மொத்த எடையில் 19ல் இருந்து 26 வரை இருக்கலாம். அதற்கு மேல் இருந்தால் கவனிக்க வேண்டும். ஒரு நாள் உணவில் 30 -40 கிராம் தான் கொழுப்பு நம் உடலில் சேரும் படி சாப்பிட வேண்டும். அதனால், தான் அதிக சதவீதம், கொழுப்புள்ள உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.

லிபிட் ப்ரொபைல்: முன் பெல்லாம் கொலஸ்ட்ரால் என்றாலே என்னவென்றே தெரியாது. இப்போது இதய பாதிப்பு வருவதை சொல்ல, கொலஸ்ட்ரால் மட்டுமல்ல லிபிட் ப்ரொபைல் சோதனை முக்கியம். ரத்தப்பரிசோதனை செய்து கொண்டால், கெட்ட கொழுப்பு, நல்ல கொழுப்பு, கொலஸ்ட்ரால் எல்லாம் தெரிந்து விடும்.


ரத்தப்பரிசோதனையில், ட்ரைகிளிசரைட்ஸ் என்பது கொழுப்பு அளவை காட்டிக்கொடுக்கும். இது அதிகமாக இருந்தால் கொலஸ்ட் ரால் அதிகம் இருக்கிறது என்று பொருள்.


பி.எம்.ஐ., 30: பாடி மாஸ் இன் டெக்ஸ் என்று சொல்லப்படும் பி.எம்.ஐ., ஒருவரின் ஒபிசிட்டி, அதிக எடையை காட்டிக்கொடுக் கும். உடல் எடை எவ்வளவு கிலோ என்பதை பார்த்து, அதில் இருந்து உயரம் அளவை மீட்டரில் வகுக்க வேண்டும்.


பி.எம்.ஐ., 22.9ஐ தாண்டக் கூடாது. அதிக பட்சம் 30க்கு இப்படி, அப்படி என்று இருந்தால், டாக்டரிடம் காட்டி விடுவது தான் நல்லது. இதய பாதிப்பு, சர்க்கரை நோய் என்ற பலவற்றுக்கும் இது தான் அடித்தளம்.


ஐ.ஜி.ஐ., உணவு: பச்சைக்காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவு பொருட்கள் தான் ஆரோக்கியமான உணவு வகைகள்."லோ கிளிசமிக் இன்டெக்ஸ்' (ஐ.ஜி.ஐ.,) உணவுகள் தான் மிக நல்லது. பார்லி, சப்பாத்தி, சேமியா, மக்காச்சோளம், கோதுமை பிரட், கொழுப்பு நீக்கப்பட்ட பால், தக்காளி, பட்டாணி போன்ற தானியங்கள் ஆகியவை நல்லது.


"ஹை கிளிசமிக் இன்டெக்ஸ்' (எச்.ஐ.ஜி.,) எனப்படும், பைனாப் பிள், உலர்ந்த திராட்சை, உருளை, பரங்கி, சக்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவை தவிர்க்க வேண்டும். ரீபைண்ட் ஆயிலை தவிர்க்க வேண் டும்; சனோலா ஓகே.


மொடாக்குடியரா: என்னவோ கற்பனை செய்யாதீங்க, காபியில் மொடாக் குடியரா? அதை குறைத்துக் கொள்ளுங்களேன். எல்.டி.எல்., கொழுப்பு அதிகமாகும்; கால்சியம் குறையும். மிதமான காபி குடியர்களுக்கு பிரச்னை இல்லை. ஆன்டி ஆக்சிடென்ட் கிடைக்கிறது. அது மிகவும் நல்லது.


காபி பற்றி நல்ல செய்தியே இல்லையா? இருக்கிறது; நரம்பு தளர்ச்சி பிரச்னை வராது; பர்கின்சன் நோய் எட்டிப்பார்க்காது. டயபடிக்ஸ் உள்ளவர்கள் கூட காபி குடிக்கலாம், டாக்டர் ஆலோசனைப்படி.


எவ்ளோ குடிக்கலாம்: உடலில் 60 சதவீதம் தண்ணீரால் நிரம்பியிருக்கிறது. உடலில் தண்ணீர் வற்றிப்போனால் ஆபத்து தான். ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் சிறுநீர் வெளியேறுகிறது. வியர்வை, மூச்சு வழியாக ஒரு லிட்டர் தண்ணீர் வெளியேறுகிறது. நாம் சாப்பிடும் உணவு மூலம் 20 சதவீதம் தண்ணீர் கிடைக்கிறது. பொதுவாக ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதாவது, ஆண்கள் 13 கப், பெண்கள் ஒன்பது கப் குடிக்க வேண்டும்.


தூக்கம் வரலியா: பல விஷயங்களால் தூக்கம் வராமல் சிலர் தவிப்பர். அவர்கள் தூக்கம் வராமல் படுக்கையில் புரளக்கூடாது. வெளியில் வந்து, புத்தகம் படிக்கலாம். தானாக தூக்கம் வந்துவிடும். ஐந்து, பத்து நிமிடம், மூச்சுபயிற்சி செய்யலாம். இதிலும் தூக்கம் வராவிட்டால், சாதிக்காய் பவுடரை வெதுவெதுப்பான பாலில் போட்டு குடிக்கலாம்.

"ஏசி'யே கதியா: எப்போதும் "ஏசி' அறையிலேயே முடங்கி இருப்பவரா? பகலில் நல்ல வெயிலில் கொஞ்சமாவது நடமாடினால் தான் இரவில் சூப்பர் தூக்கம் வரும். சூரிய வெளிச்சம் படும் போது தான் உடலில் வைட்டமின் "டி' சேர்கிறது. இது தான் தூக்கம் தடைபடாமல் வருவதற்கு மிகவும் முக்கியம். இது போல, தூங்கப் போகும் முன் "டிவி' பார்க்கக்கூடாது; தூக்கம் வரவில்லையெனில் ஏதாவது படிக் கலாம்; கண்டிப்பாக தூக்கம் வரும். படுக்கை அறையில் முடிந்தவரை காற்றோட்டம் இருப்பது நல்லது.


சின்ன சின்ன யோகா: சிறிய வயதில் ஆரம்பித்தால் தான் நல்லது; இல்லாவிட்டால், யோகா செய்து பலனில்லை என்று சிலர் நினைக் கின்றனர். ஆனால், அடிப்படை யோகா பயிற்சியை கற்றுக் கொண்டாலே போதும், உடலும், உள்ளமும் சுறுசுறு தான். எலும்புகள் வலுவடையும், தசைகள் இறுக்கம் குறையும். தலைவலிக்கு மாத்திரையை தேடவே மாட்டீர்கள்.முதுகு வலி, முழங்கால் வலி, தசை பிடிப்பு என்பதற்கு இடமே இருக்காது.


- டாக்டர் ஆர். சந்திரசேகரன் எம்.டி., சென்னை.


தூக்கம் கெடுக்கும் சாக்லெட் மோகம்!




சிறிய வயதில் சாக்லெட் சாப்பிட்டால், உடலுக்கும் சத்து தான்.ஆனால், அதற்காக சாக்லெட்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தால், உடலுக்கு தீங்கு தான். இளைய வயதை தாண்டிய பின்னும், சாக்லெட் மோகம் குறையாவிட்டால், குறிப்பாக தூக்கம் கெடும் என்று நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

காபி, டீ குடித்தால் துக்கம் வராது என்பது தெரிந்த உண்மை. காபின் என்ற ரசாயன கலவை இருப்பதே இதற்கு காரணம். இவற்றில் உள்ளது போல பல மடங்கு காபின் ரசாயனம் , சாக்லெட்டில் உள்ளது. அதனால், சாக்லெட் பழக்கம் உள்ளவர்கள் கண்டிப்பாக தூக்கமில்லாமல் தவிப்பர். சாதாரண சாக்லெட்டில் ஒன்பது மில்லி கிராம் வரை காபின் இருக்கிறது; சில உயர் ரக சாக்லெட்டில் 30 மில்லி கிராம் வரை உள்ளது. அப்படியானால், தூக்கம் எந்த அளவுக்கு கெடும் என்பதை மதிப்பிட்டுக்கொள்ளலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சாக்லெட்டில் காபின் சத்துடன், தியோப்ரோமின் என்ற ரசாயனமும் உள் ளது. இது தான் தூக் கத்தை கெடுக்க ஊக்குவிக்கின்றது.


"தூங்கப்போகும் முன், சில மணி நேரம் வரை சாக்லெட், டீ, காபி, குளிர்பானம் குடிக்காமல் இருப்பது நல்லது; அப்போது தான் தூக்கம் நிம்மதியாக வரும்' என்று தேசிய உறக்க ஆராய்ச்சி பவுண்டேஷன் கூறியுள்ளது. இப்ப புரியுதா, நைட்டுல சாக்லெட் சாப்பிடாதீங்க!


நல்லா தூங்கினா போச்சு ஹாச்ச்ச்...!


"ஹாச்...' என்று ஒரு முறை தும்மினால் போதும், அடுத்த ஒரு வாரத் துக்கு சளி, சனியாகப்பிடித்துக் கொண்டு விடும். ஜலதோஷம் வந்து விட்டால்போதும், மூக்கே சிவக்கும் அளவுக்கு சிலர் பிழிந்து எடுத்துவிடுவர்; கர்சீப்பை எல்லாம் நனைத்து விடுவர். ஒரு உண்மையை மறந்திருப்பர்; தூங்கி எழுந்தவுடன் ஜலதோஷம் குறைந்திருக்கும். இதை பலர் கவனித்திருக்க மாட்டர். தூக்கம் குறைவாக இருந்தால், அதுவே, ஜலதோஷத்துக்கு நண்பன். ஹாச்ச்ச்...இன்னும் அதிமாகி விடும். நன்றாக தூங்கினால், வெகுவாக குறைந்து விடும். இது தான் அமெரிக்க உறக்கவியல் மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடிப்பு.


"நன்றாக எட்டு மணி நேரம் தூங்குவோருக்கு ஜலதோஷம் வருவது அரிதாகவே இருக்கும். தூக்கமில்லாமல் இருப்போருக்கு அடிக்கடி ஜலதோஷம் வர வாய்ப்புள்ளது. தூங்கி விட்டால், ஜலதோஷத்தை பரப்பும் கிருமிகள் ஒடுங்கி விடுகின்றன. அவை குறைந்து விடுவதால் மீண்டும் எழுந்திருக்கும் போது, ஜலதோஷத்தின் வீரியம் குறைந்து விடுகிறது என்றும் நிபுணர்கள் தெளிவுபடுத்துகின்றனர். உங்களுக்கு ஜலதோஷம் வந்தால் இப்படி முயற்சி பண்ணிப்பாருங்களேன்!



ரெண்டு வயசில் டூத் பிரஷ் தாங்க!



குழந்தை பிறந்தவுடன், ஒரு வயதில் ஆறு பற்கள் முளைத்து விடும். அதன் பின் நாலைந்து மாதங்கள் முளைக்காது. அதன் பின் மற்ற பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். கடைவாய்ப்பற்கள் நான்கு ஒன்றரை வயதில் முளைக்க ஆரம் பித்து, இரண்டு வயதில் தெரியும். எ னினும், பால்பல் விழுந்து, நிரந்தர பற்களுக்கு இடம் அளிக்கும். ஆறு வயதில் ஆரம்பித்த நிரந்தர பற்கள் வளருவது, 12 வயதில் பூர்த்தி அடையும். அறிவுப்பல், அதாவது, 20 வயதுக்கு மேல் முளைக்கும் கடைவாய்ப்பல்லை சொல்வர். அது சிலருக்கு முளைக்காமலும் போகும்.


பற்களை பளீச்...சென வைத்திருப்பதும், பாதுகாப்பாக வைத்திருப்பதும் குழந்தை வயதில் இருந்தே பராமரிப்பதை பொறுத்து தான் அமையும். அதனால் தான், இரண்டு வயதில் இருந்தே பல்தேய்க்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு ஊக்குவிக்க வேண்டும்;அப்போதே, மிருதுவான டூத் பிரஷ் வாங்கி, பழக்க வைக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். காலை, இரவில் பல் துலக்கும் பழக் கம் வந்து விட் டால், எந்த வய திலும் பற்கள் விழவோ, அழுக்கு படியவோ வாய்ப்பே இல்லை. அறுபது வயதிலும் பற்கள் பளீச் தான்.


மிளகாய் பஜ்ஜி... சமோசா!
ஏப்ரல் 04,2009,16:43 IST


சாப்பிட சாப்பிட ருசி : சாப்பிட்ட பின் கொலஸ்ட்ரால்

யாருக்கு தான் பிடிக்காது, மிளகாய் பஜ்ஜி, சமோசா. ஆனால், தரமானது தானா என்று பார்த்துச் சாப்பிட் டால் உடலுக்கு நல்லது தானே. இல்லாவிட்டால், கெட்ட கொலஸ்ட்ரால் பூதம் பாடாய்ப்படுத்தி விடும்.


அப்புறம் என்ன...? ரத்தத்தில் கொழுப்பு ஏறி, மார்பை பிடித்துக்கொள்ள வேண்டியது தான். அதற்கு பின் தான் பலருக்கே ஞானோதயம் வரும். கண்ட கண்ட எண்ணெய், காயவைத்த எண்ணெய் போன்றவற்றில் செய்யப்படும் பஜ்ஜி சமாச்சாரங்கள் மூலம் நம் உடலில் புகுந்து கொள்ளும் கொழுப்பு தான் "டிரான்ஸ் பேட்' என்ற புது வகை கொழுப்பு.


புதுக் கொழுப்பு இது


எந்த ஒரு உணவிலும் சாச்சுரேட்டட் மற்றும் "நான் - சாச்சுரேட்டட்' கொழுப்பு உள்ளதாக தான் இதுவரை கருதப்பட்டது. ஆனால், புதிதாக ,சர்வதேச அளவில் கண்டுபிடிக்கப்பட்டது தான் "டிரான்ஸ் பேட்' கொழுப்பு.


சாச்சுரேட்டட் கொழுப்பு தான் கெட்ட கொழுப்பை, ரத்தத்தில் சேர்க்கி றது. அதுபோல, "டிரான்ஸ் பேட்' கொழுப்பு சேர்ந்தால் அதை விட 15 மடங்கு கெட்ட கொழுப்பு சேருமாம். அமெரிக்கா உட்பட, பல நாடுகளில் இந்த வகை கொழுப்பு கட்டுப்படுத்தப்பட்டு விட்டது.


யப்பா... 30 சதவீதமா?


"டிரான்ஸ் பேட்' கொழுப்பு, அதிக பட்சம் இரண்டு சதவீதம் வரை இருக்கலாம் என்று சர்வதேச அளவில் மருத்துவ நிபுணர்கள் வரையறுத்துள்ளனர். ஆனால், இந்தியாவில் சமீப காலம் வரை நடத்தப்பட்ட பல்வேறு அமைப்புகளின் ஆய்வுகளில், "இந்தியாவில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்களில் 10 முதல் 23 சதவீதம் வரை "டிரான்ஸ் பேட்' கொழுப்பு உள்ளது ' என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


சில எண்ணெய்களில் 30 சதவீதம் வரை கூட இந்த மோசமான கொழுப்பு உள்ளதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. "டிரான்ஸ் பேட்' கொழுப்பு நமக்கு புதிது; அதை தடுக்க தனியாக சட்டம் கொண்டு வந்தால் தான் நல்லது; இல்லாவிட்டால் தயாரிப் பாளர்கள் இது பற்றி பெரிதாக கண்டுகொள்ளமாட்டார்கள்' என்று மருத்துவ தரப்பில் வேதனை தெரிவிக்கப்பட்டது.


உஷாருங்க உஷாரு


எண்ணெயில் பொரித்த அப்பளம், பஜ்ஜி, போண்டா, சமோசா போன்றவற்றுக்கு நம்மில் பலரும் அடிமையாகி விட்டனர். எண்ணெய் இல்லாமல் செய்து தரப்படும் உணவுகளில் நாட்டம் இல்லை. சாலையோர கடைகளில் கூட, பஜ்ஜி, சமோசா விற்பனை கன ஜோர் தான்.


எந்த எண்ணெயில் பொரித்தது, தரமானது தானா என்று எத்தனை பேர் பார்க்கின்றனர்? "ஒரு நாளைக்கு சாப்பிட்டா கொலஸ்ட்ரால் வந்துடுமா... என்ன?' என்று தத்துவம் பேசியே பல நாள் சாப்பிடுவோர் பலரும் உள்ளனர்.


நாற்பது வயதை தாண்டியபின் தான் , ஒரு முறை டாக்டரிடம் போய் பி.பி.,செக்கப் செய்யும் போது இந்த "டிரான்ஸ் பேட்'பூதம் எந்த அளவுக்கு வேலை காட்டிவிட்டது என்று புரியும். அதற்கு பதில் இப்போதே காத்துக்கொள்ளலாமே!


சர்க்கரை நோய்க்கும்...


இதய நோய் வருவதற்கு காரணம், கொலஸ்ட்ரால் தான். சாச்சுரேட்டட் கொலஸ்ட்ரால் மூலம், கெட்ட கொலஸ்ட்ரால் , ரத்தத்தில் சேரும். அப்படி சேரும் போது தான், ரத்த கொலஸ்ட்ரால் அதிகரித்து, ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.


சாச்சுரேட்டட் கொலஸ்ட்ரால் மூலம் ஏற்படும் கெட்ட கொலஸ்ட்ராலை விட, "டிரான்ஸ் பேட்' மூலம் 15 மடங்கு வரை கொலஸ்ட்ரால் சேர்க்கும் ஆபத்து உள்ளது. இது மட்டுமில்லாமல், "சி - சியாக்டிவ்' ப்ரோட்டீன் என்ற ஒரு தீய சத்தும், இதன் மூலம் உடலில் சேர்கிறது. இது தான் இதய பாதிப்புக்கு இன்னும் துணை போகிறது.


இதயத்தை தான் பாதிக்கிறது என்றால், ரத்தத்தில் உள்ள க்ளூக்கோஸ் அளவையும் அதிகரிக்க "டிரான்ஸ் பேட்' துணை போகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது.


எது தான் நல்லது?


பலருக்கும் எந்த எண்ணெய் தான் நல்லது என்று தெரியாமல் குழம்புகின்றனர். "பாலி அன் சாச்சுரேட்டட் பேட்டி ஆசிட் (புபா) உள்ள மக்காச்சோள அடிப்படையிலான எண்ணெய்கள், சன் பிளவர், ஆகியவற்றுடன், "மோனோ அன் சாச்சுரேட்டட் பேட்டி ஆசிட்' (முபா) கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், சோயா எண்ணெய் ஆகியவற்றை கலந்து பயன்படுத்துவது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.


இவற்றை எல்லாம் விட, ஆலிவ் எண்ணெய் மிகச் சிறந்தது; ஆனால், விலையும் கையை கடிப்பது தான்.


ஈசியான வழி இதோ


இப்போதுள்ள எண்ணெய் பழக்கத்தை கைவிட முடியாது தான்; ஆனால் , கட்டுப்படுத்திக்கொள்ளலாமே. இதோ சில வழிகள்:


* எண்ணெய்யை வாணலியில் ஊற்றி பொறிக் கும் போது, அதிக சூட்டில் வைக்க வேண்டாம்; தீப்பிடிக்கும் அளவுக்கு வைக்கவே வேண்டாம்.


* காய்ந்த எண்ணெயை மீண்டும் பயன் படுத்தவே கூடாது; இது தான் மிகப் பெரிய தவறு.


* பிளாஸ்டிக் பாட்டிலில் எண்ணெய், சூரிய வெளிச்சம் படும் வகையில் வைக்க வேண்டாம்.


* கரண்டியை பயன்படுத்தாமல், ஸ்பூனை வைத்து எண்ணெய் எடுத்து சமைக்கவும்.


* காய்கறிகளை வேகவைத்து, அதன் பின் சிறிய அளவு எண்ணெயில் வதக்கலாமே.


இப்படி செய்யுங்க முதலில்!