2 ஆழாக்கு முருங்கைக் கீரையை உப்பு போட்ட தண்ணீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 3 பெரிய வெங்காயம், 4 பச்சை மிளகாய் இவற்றை பொடிப் பொடியாக நறுக்கி இரண்டையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
லு லிட்டர் தண்ணீரை உப்பு போட்டு கொதிக்க விடவும்.இதில் ஒரு ஆழாக்கு அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சரியான முறையில் கிளறவும். இதே கரைசலில் முருங்கைக்கீரையையும் சேர்த்து கிளறிக்கொண்டே வரவேண்டும்.கூழ் பதத்திற்கு இந்த கரைசல் வரும் வரை கிளற வேண்டும்.பின்னர் அரை டீஸ்பூன் பெருங்காயத் தூளை போட்டு சிறு சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும்.
வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் எண்ணெய் தடவி இந்த உருண்டைகளை அடைகளாகத் தட்டி தோசைக்கல்லில் போட்டு இரு புறமும் வேகவிடவும்.
ஒரு கப் வாழைப்பூவை சுத்தம் செய்து வேகவைத்துக் கொள்ளவும். லு கப் கடலைப்பருப்பை ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், கால் டீஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட், நறுக்கிய 2 பச்சை மிளகாய், உப்பு இவையனைத்தையும் கடலைப்பருப்பு, வாழைப்பூவுடன் சேர்த்துக் கொள்ளவும். தேவையெனில் பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக்கிக் கொண்டு இட்லிப் பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும்.
(ஆவியில் வேக வைத்து எடுப்பதால் B.P. உள்ளவர்களுக்கு நல்ல ஆரோகியமான உணவு.)
* வெங்காயம்
* பூண்டு
* வாழைத்தண்டு
* வாழைப்பூ
* சுரைக்காய்
* பீர்க்கங்காய்
* பார்லி
* சீரகம்
* வெந்தயம்
* பொரிக்காத வேகவைத்த மீன்
* வெள்ளைத்தாமரை
* மருதமரப் பட்டை
* மனம் விட்டுச் சிரிப்பது
0 comments:
Post a Comment