தேவை

கொய்யாக்காய் துண்டங்கள் -1கப், வெந்தயம் - 1 தேக்கரண்டி, மிளகாய் வற்றல் பொடி - 1 தேக்கரண்டி, உப்பு - தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் - அரை கப், கடுகு - அரை தேக்கரண்டி

செய்முறை

பழம் கண்டிப்பாக கூடாது. செங்காயாக இருக்கும் கொய்யாக்காயின் நடுப்பகுதியில் இருக்கும் விதைகளை நீக்கவும். மீதி சதைப்பகுதியை சிறு துண்டங்களாக்கவும். வெந்தயத்தை சிவக்க வறுத்து பொடிக்கவும். மிளகாய் வற்றலை வறுத்து பொடிக்கவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி கடுகை வெடிக்க விடவும். அத்துடன் கொய்யாக்காய் துண்டங்களைச் சேர்த்து வதக்கவும். வெந்தயப்பொடி, உப்பு, பெருங்காயப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து கலந்து, ஆறியபிறகு கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைக்கவும்.

பலன்கள்

வயிற்றைச் சுத்தமாக்கும். மயக்கம், சோர்வு ஆகியவைகளை நீக்கும். ஆண்களின் ஆண் தன்மையை மேம்படுத்தும். விந்தணுக் குறைபாடு உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டியது கொய்யா



ஏழைகளுக்கு உதவும் டாக்டர் கோஷ் அறக்கட்டளை

நம் உடலில் இதயத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் அளிக்கிறோமோ, அதே அளவு முக்கியத்துவம் பெற்றவை மூளை மற்றும் நரம்பு மண்டலங்கள். "நியூராலஜி' எனப்படும் நரம்பியல் மருத்துவத் துறையில் சென்னையிலும், கோல்கட்டாவிலும் சேவை செய்து வருகிறார் டாக்டர் சித்தார்த்த கோஷ். வேலூர் சி.எம்.சி.,யில் மேற்படிப்பை முடித்த அவர், 18 ஆண்டுகளாக சென்னை மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். தற்போது, நந்தனத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிகிறார். ஆண்டுக்கு 600க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். பல்லாயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு, மூளையில் உள்ள குறைபாடுகளை நீக்கி நோயாளிகளை குணப்படுத்தி வருகிறார். ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காக இலவச கிளினிக்குகளை "டாக்டர் கோஷ் அறக்கட்டளை' பெயரில் நடத்தி வருகிறார்.



சென்னை பள்ளிக்கரணையில் கே.பி., ஆயில் மில் அருகிலும், கோல்கட்டாவில் பேக் பஜாரிலும் இந்த கிளினிக்குகள் செயல்பட்டு வருகின்றன. கிளினிக்கிற்கு வரும் ஏழை நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டால், அவர்களை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்து தனது சொந்த செலவில், அறுவை சிகிச்சைக்கு கூட கட்டணம் பெறாமல் சிகிச்சை அளித்து வருகிறார்.அப்பல்லோ மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய அறை வாடகை உள்ளிட்ட இதர மருந்து கட்டணங்களை மட்டும் செலுத்தினால் போதும்.



இந்த வகையில் குறைந்த செலவில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சேவை குறித்து டாக்டர் சித்தார்த்த கோஷ் கூறியதாவது: ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காக எங்கள் அறக்கட்டளை மூலம் எங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறோம். இதுவரை 15 லட்சம் ரூபாய் வரை உதவி செய்துள்ளோம். மருத்துவ மாணவர்களுக்கு படிப்பு உதவிகள் செய்து வருகிறோம்.



அறக்கட்டளை சார்பில் புதிய கிளினிக்குகள் அமைக்க ஆர்மீனியன் சர்ச் ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளது. எங்களது அறக்கட்டளைக்கு அரசும் உதவினால் மகிழ்ச்சி அடைவோம்.இந்தியாவில் பெருநகரங்களில் உள்ள ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்படும் மிகவும் சிக்கலான, "ஸ்கல் பேஸ்டு நியூரோ சர்ஜரி'களை செய்துள்ளேன். சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றுவோர் அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருப்பதால் அவர்களுக்கு கழுத்து வலி, இடுப்பு வலி ஏற்படுகிறது. அதிக நேரம் உட்காருவதை தவிர்க்க வேண்டும். கழுத்து வலி அதிகரித்து கைகளுக்கு வலி பரவினால் நரம்பியல் டாக்டரை பார்ப்பது அவசியம்.



இவ்வாறு டாக்டர் சித்தார்த்த கோஷ் கூறினார்.



தொடர்புக்கு: கிருஷ்ணகுமார்; போன்: 99400 22925


அசட்டையாக இருப்பவரா நீங்க?




இனி உஷார்

"சே, இவ்ளோ தானா... கண்டிப்பா இனி பாலோ பண்ணனும்...ன்னு நினைப்பீர்கள். ஆனால், அசட்டையாக இருந்து விடுவீர்கள், இனி அப்படி வேண்டாமே. கொழுப்பு எவ்ளோ: ஆண்களின் மொத்த எடையில், 12ல் இருந்து 18 சதவீதம் வரை கொழுப்பு இருக்கலாம்; அது போல பெண்களுக் குள்ள மொத்த எடையில் 19ல் இருந்து 26 வரை இருக்கலாம். அதற்கு மேல் இருந்தால் கவனிக்க வேண்டும். ஒரு நாள் உணவில் 30 -40 கிராம் தான் கொழுப்பு நம் உடலில் சேரும் படி சாப்பிட வேண்டும். அதனால், தான் அதிக சதவீதம், கொழுப்புள்ள உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.

லிபிட் ப்ரொபைல்: முன் பெல்லாம் கொலஸ்ட்ரால் என்றாலே என்னவென்றே தெரியாது. இப்போது இதய பாதிப்பு வருவதை சொல்ல, கொலஸ்ட்ரால் மட்டுமல்ல லிபிட் ப்ரொபைல் சோதனை முக்கியம். ரத்தப்பரிசோதனை செய்து கொண்டால், கெட்ட கொழுப்பு, நல்ல கொழுப்பு, கொலஸ்ட்ரால் எல்லாம் தெரிந்து விடும்.


ரத்தப்பரிசோதனையில், ட்ரைகிளிசரைட்ஸ் என்பது கொழுப்பு அளவை காட்டிக்கொடுக்கும். இது அதிகமாக இருந்தால் கொலஸ்ட் ரால் அதிகம் இருக்கிறது என்று பொருள்.


பி.எம்.ஐ., 30: பாடி மாஸ் இன் டெக்ஸ் என்று சொல்லப்படும் பி.எம்.ஐ., ஒருவரின் ஒபிசிட்டி, அதிக எடையை காட்டிக்கொடுக் கும். உடல் எடை எவ்வளவு கிலோ என்பதை பார்த்து, அதில் இருந்து உயரம் அளவை மீட்டரில் வகுக்க வேண்டும்.


பி.எம்.ஐ., 22.9ஐ தாண்டக் கூடாது. அதிக பட்சம் 30க்கு இப்படி, அப்படி என்று இருந்தால், டாக்டரிடம் காட்டி விடுவது தான் நல்லது. இதய பாதிப்பு, சர்க்கரை நோய் என்ற பலவற்றுக்கும் இது தான் அடித்தளம்.


ஐ.ஜி.ஐ., உணவு: பச்சைக்காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவு பொருட்கள் தான் ஆரோக்கியமான உணவு வகைகள்."லோ கிளிசமிக் இன்டெக்ஸ்' (ஐ.ஜி.ஐ.,) உணவுகள் தான் மிக நல்லது. பார்லி, சப்பாத்தி, சேமியா, மக்காச்சோளம், கோதுமை பிரட், கொழுப்பு நீக்கப்பட்ட பால், தக்காளி, பட்டாணி போன்ற தானியங்கள் ஆகியவை நல்லது.


"ஹை கிளிசமிக் இன்டெக்ஸ்' (எச்.ஐ.ஜி.,) எனப்படும், பைனாப் பிள், உலர்ந்த திராட்சை, உருளை, பரங்கி, சக்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவை தவிர்க்க வேண்டும். ரீபைண்ட் ஆயிலை தவிர்க்க வேண் டும்; சனோலா ஓகே.


மொடாக்குடியரா: என்னவோ கற்பனை செய்யாதீங்க, காபியில் மொடாக் குடியரா? அதை குறைத்துக் கொள்ளுங்களேன். எல்.டி.எல்., கொழுப்பு அதிகமாகும்; கால்சியம் குறையும். மிதமான காபி குடியர்களுக்கு பிரச்னை இல்லை. ஆன்டி ஆக்சிடென்ட் கிடைக்கிறது. அது மிகவும் நல்லது.


காபி பற்றி நல்ல செய்தியே இல்லையா? இருக்கிறது; நரம்பு தளர்ச்சி பிரச்னை வராது; பர்கின்சன் நோய் எட்டிப்பார்க்காது. டயபடிக்ஸ் உள்ளவர்கள் கூட காபி குடிக்கலாம், டாக்டர் ஆலோசனைப்படி.


எவ்ளோ குடிக்கலாம்: உடலில் 60 சதவீதம் தண்ணீரால் நிரம்பியிருக்கிறது. உடலில் தண்ணீர் வற்றிப்போனால் ஆபத்து தான். ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் சிறுநீர் வெளியேறுகிறது. வியர்வை, மூச்சு வழியாக ஒரு லிட்டர் தண்ணீர் வெளியேறுகிறது. நாம் சாப்பிடும் உணவு மூலம் 20 சதவீதம் தண்ணீர் கிடைக்கிறது. பொதுவாக ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதாவது, ஆண்கள் 13 கப், பெண்கள் ஒன்பது கப் குடிக்க வேண்டும்.


தூக்கம் வரலியா: பல விஷயங்களால் தூக்கம் வராமல் சிலர் தவிப்பர். அவர்கள் தூக்கம் வராமல் படுக்கையில் புரளக்கூடாது. வெளியில் வந்து, புத்தகம் படிக்கலாம். தானாக தூக்கம் வந்துவிடும். ஐந்து, பத்து நிமிடம், மூச்சுபயிற்சி செய்யலாம். இதிலும் தூக்கம் வராவிட்டால், சாதிக்காய் பவுடரை வெதுவெதுப்பான பாலில் போட்டு குடிக்கலாம்.

"ஏசி'யே கதியா: எப்போதும் "ஏசி' அறையிலேயே முடங்கி இருப்பவரா? பகலில் நல்ல வெயிலில் கொஞ்சமாவது நடமாடினால் தான் இரவில் சூப்பர் தூக்கம் வரும். சூரிய வெளிச்சம் படும் போது தான் உடலில் வைட்டமின் "டி' சேர்கிறது. இது தான் தூக்கம் தடைபடாமல் வருவதற்கு மிகவும் முக்கியம். இது போல, தூங்கப் போகும் முன் "டிவி' பார்க்கக்கூடாது; தூக்கம் வரவில்லையெனில் ஏதாவது படிக் கலாம்; கண்டிப்பாக தூக்கம் வரும். படுக்கை அறையில் முடிந்தவரை காற்றோட்டம் இருப்பது நல்லது.


சின்ன சின்ன யோகா: சிறிய வயதில் ஆரம்பித்தால் தான் நல்லது; இல்லாவிட்டால், யோகா செய்து பலனில்லை என்று சிலர் நினைக் கின்றனர். ஆனால், அடிப்படை யோகா பயிற்சியை கற்றுக் கொண்டாலே போதும், உடலும், உள்ளமும் சுறுசுறு தான். எலும்புகள் வலுவடையும், தசைகள் இறுக்கம் குறையும். தலைவலிக்கு மாத்திரையை தேடவே மாட்டீர்கள்.முதுகு வலி, முழங்கால் வலி, தசை பிடிப்பு என்பதற்கு இடமே இருக்காது.


- டாக்டர் ஆர். சந்திரசேகரன் எம்.டி., சென்னை.


தூக்கம் கெடுக்கும் சாக்லெட் மோகம்!




சிறிய வயதில் சாக்லெட் சாப்பிட்டால், உடலுக்கும் சத்து தான்.ஆனால், அதற்காக சாக்லெட்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தால், உடலுக்கு தீங்கு தான். இளைய வயதை தாண்டிய பின்னும், சாக்லெட் மோகம் குறையாவிட்டால், குறிப்பாக தூக்கம் கெடும் என்று நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

காபி, டீ குடித்தால் துக்கம் வராது என்பது தெரிந்த உண்மை. காபின் என்ற ரசாயன கலவை இருப்பதே இதற்கு காரணம். இவற்றில் உள்ளது போல பல மடங்கு காபின் ரசாயனம் , சாக்லெட்டில் உள்ளது. அதனால், சாக்லெட் பழக்கம் உள்ளவர்கள் கண்டிப்பாக தூக்கமில்லாமல் தவிப்பர். சாதாரண சாக்லெட்டில் ஒன்பது மில்லி கிராம் வரை காபின் இருக்கிறது; சில உயர் ரக சாக்லெட்டில் 30 மில்லி கிராம் வரை உள்ளது. அப்படியானால், தூக்கம் எந்த அளவுக்கு கெடும் என்பதை மதிப்பிட்டுக்கொள்ளலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சாக்லெட்டில் காபின் சத்துடன், தியோப்ரோமின் என்ற ரசாயனமும் உள் ளது. இது தான் தூக் கத்தை கெடுக்க ஊக்குவிக்கின்றது.


"தூங்கப்போகும் முன், சில மணி நேரம் வரை சாக்லெட், டீ, காபி, குளிர்பானம் குடிக்காமல் இருப்பது நல்லது; அப்போது தான் தூக்கம் நிம்மதியாக வரும்' என்று தேசிய உறக்க ஆராய்ச்சி பவுண்டேஷன் கூறியுள்ளது. இப்ப புரியுதா, நைட்டுல சாக்லெட் சாப்பிடாதீங்க!


நல்லா தூங்கினா போச்சு ஹாச்ச்ச்...!


"ஹாச்...' என்று ஒரு முறை தும்மினால் போதும், அடுத்த ஒரு வாரத் துக்கு சளி, சனியாகப்பிடித்துக் கொண்டு விடும். ஜலதோஷம் வந்து விட்டால்போதும், மூக்கே சிவக்கும் அளவுக்கு சிலர் பிழிந்து எடுத்துவிடுவர்; கர்சீப்பை எல்லாம் நனைத்து விடுவர். ஒரு உண்மையை மறந்திருப்பர்; தூங்கி எழுந்தவுடன் ஜலதோஷம் குறைந்திருக்கும். இதை பலர் கவனித்திருக்க மாட்டர். தூக்கம் குறைவாக இருந்தால், அதுவே, ஜலதோஷத்துக்கு நண்பன். ஹாச்ச்ச்...இன்னும் அதிமாகி விடும். நன்றாக தூங்கினால், வெகுவாக குறைந்து விடும். இது தான் அமெரிக்க உறக்கவியல் மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடிப்பு.


"நன்றாக எட்டு மணி நேரம் தூங்குவோருக்கு ஜலதோஷம் வருவது அரிதாகவே இருக்கும். தூக்கமில்லாமல் இருப்போருக்கு அடிக்கடி ஜலதோஷம் வர வாய்ப்புள்ளது. தூங்கி விட்டால், ஜலதோஷத்தை பரப்பும் கிருமிகள் ஒடுங்கி விடுகின்றன. அவை குறைந்து விடுவதால் மீண்டும் எழுந்திருக்கும் போது, ஜலதோஷத்தின் வீரியம் குறைந்து விடுகிறது என்றும் நிபுணர்கள் தெளிவுபடுத்துகின்றனர். உங்களுக்கு ஜலதோஷம் வந்தால் இப்படி முயற்சி பண்ணிப்பாருங்களேன்!



ரெண்டு வயசில் டூத் பிரஷ் தாங்க!



குழந்தை பிறந்தவுடன், ஒரு வயதில் ஆறு பற்கள் முளைத்து விடும். அதன் பின் நாலைந்து மாதங்கள் முளைக்காது. அதன் பின் மற்ற பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். கடைவாய்ப்பற்கள் நான்கு ஒன்றரை வயதில் முளைக்க ஆரம் பித்து, இரண்டு வயதில் தெரியும். எ னினும், பால்பல் விழுந்து, நிரந்தர பற்களுக்கு இடம் அளிக்கும். ஆறு வயதில் ஆரம்பித்த நிரந்தர பற்கள் வளருவது, 12 வயதில் பூர்த்தி அடையும். அறிவுப்பல், அதாவது, 20 வயதுக்கு மேல் முளைக்கும் கடைவாய்ப்பல்லை சொல்வர். அது சிலருக்கு முளைக்காமலும் போகும்.


பற்களை பளீச்...சென வைத்திருப்பதும், பாதுகாப்பாக வைத்திருப்பதும் குழந்தை வயதில் இருந்தே பராமரிப்பதை பொறுத்து தான் அமையும். அதனால் தான், இரண்டு வயதில் இருந்தே பல்தேய்க்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு ஊக்குவிக்க வேண்டும்;அப்போதே, மிருதுவான டூத் பிரஷ் வாங்கி, பழக்க வைக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். காலை, இரவில் பல் துலக்கும் பழக் கம் வந்து விட் டால், எந்த வய திலும் பற்கள் விழவோ, அழுக்கு படியவோ வாய்ப்பே இல்லை. அறுபது வயதிலும் பற்கள் பளீச் தான்.


மிளகாய் பஜ்ஜி... சமோசா!
ஏப்ரல் 04,2009,16:43 IST


சாப்பிட சாப்பிட ருசி : சாப்பிட்ட பின் கொலஸ்ட்ரால்

யாருக்கு தான் பிடிக்காது, மிளகாய் பஜ்ஜி, சமோசா. ஆனால், தரமானது தானா என்று பார்த்துச் சாப்பிட் டால் உடலுக்கு நல்லது தானே. இல்லாவிட்டால், கெட்ட கொலஸ்ட்ரால் பூதம் பாடாய்ப்படுத்தி விடும்.


அப்புறம் என்ன...? ரத்தத்தில் கொழுப்பு ஏறி, மார்பை பிடித்துக்கொள்ள வேண்டியது தான். அதற்கு பின் தான் பலருக்கே ஞானோதயம் வரும். கண்ட கண்ட எண்ணெய், காயவைத்த எண்ணெய் போன்றவற்றில் செய்யப்படும் பஜ்ஜி சமாச்சாரங்கள் மூலம் நம் உடலில் புகுந்து கொள்ளும் கொழுப்பு தான் "டிரான்ஸ் பேட்' என்ற புது வகை கொழுப்பு.


புதுக் கொழுப்பு இது


எந்த ஒரு உணவிலும் சாச்சுரேட்டட் மற்றும் "நான் - சாச்சுரேட்டட்' கொழுப்பு உள்ளதாக தான் இதுவரை கருதப்பட்டது. ஆனால், புதிதாக ,சர்வதேச அளவில் கண்டுபிடிக்கப்பட்டது தான் "டிரான்ஸ் பேட்' கொழுப்பு.


சாச்சுரேட்டட் கொழுப்பு தான் கெட்ட கொழுப்பை, ரத்தத்தில் சேர்க்கி றது. அதுபோல, "டிரான்ஸ் பேட்' கொழுப்பு சேர்ந்தால் அதை விட 15 மடங்கு கெட்ட கொழுப்பு சேருமாம். அமெரிக்கா உட்பட, பல நாடுகளில் இந்த வகை கொழுப்பு கட்டுப்படுத்தப்பட்டு விட்டது.


யப்பா... 30 சதவீதமா?


"டிரான்ஸ் பேட்' கொழுப்பு, அதிக பட்சம் இரண்டு சதவீதம் வரை இருக்கலாம் என்று சர்வதேச அளவில் மருத்துவ நிபுணர்கள் வரையறுத்துள்ளனர். ஆனால், இந்தியாவில் சமீப காலம் வரை நடத்தப்பட்ட பல்வேறு அமைப்புகளின் ஆய்வுகளில், "இந்தியாவில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்களில் 10 முதல் 23 சதவீதம் வரை "டிரான்ஸ் பேட்' கொழுப்பு உள்ளது ' என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


சில எண்ணெய்களில் 30 சதவீதம் வரை கூட இந்த மோசமான கொழுப்பு உள்ளதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. "டிரான்ஸ் பேட்' கொழுப்பு நமக்கு புதிது; அதை தடுக்க தனியாக சட்டம் கொண்டு வந்தால் தான் நல்லது; இல்லாவிட்டால் தயாரிப் பாளர்கள் இது பற்றி பெரிதாக கண்டுகொள்ளமாட்டார்கள்' என்று மருத்துவ தரப்பில் வேதனை தெரிவிக்கப்பட்டது.


உஷாருங்க உஷாரு


எண்ணெயில் பொரித்த அப்பளம், பஜ்ஜி, போண்டா, சமோசா போன்றவற்றுக்கு நம்மில் பலரும் அடிமையாகி விட்டனர். எண்ணெய் இல்லாமல் செய்து தரப்படும் உணவுகளில் நாட்டம் இல்லை. சாலையோர கடைகளில் கூட, பஜ்ஜி, சமோசா விற்பனை கன ஜோர் தான்.


எந்த எண்ணெயில் பொரித்தது, தரமானது தானா என்று எத்தனை பேர் பார்க்கின்றனர்? "ஒரு நாளைக்கு சாப்பிட்டா கொலஸ்ட்ரால் வந்துடுமா... என்ன?' என்று தத்துவம் பேசியே பல நாள் சாப்பிடுவோர் பலரும் உள்ளனர்.


நாற்பது வயதை தாண்டியபின் தான் , ஒரு முறை டாக்டரிடம் போய் பி.பி.,செக்கப் செய்யும் போது இந்த "டிரான்ஸ் பேட்'பூதம் எந்த அளவுக்கு வேலை காட்டிவிட்டது என்று புரியும். அதற்கு பதில் இப்போதே காத்துக்கொள்ளலாமே!


சர்க்கரை நோய்க்கும்...


இதய நோய் வருவதற்கு காரணம், கொலஸ்ட்ரால் தான். சாச்சுரேட்டட் கொலஸ்ட்ரால் மூலம், கெட்ட கொலஸ்ட்ரால் , ரத்தத்தில் சேரும். அப்படி சேரும் போது தான், ரத்த கொலஸ்ட்ரால் அதிகரித்து, ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.


சாச்சுரேட்டட் கொலஸ்ட்ரால் மூலம் ஏற்படும் கெட்ட கொலஸ்ட்ராலை விட, "டிரான்ஸ் பேட்' மூலம் 15 மடங்கு வரை கொலஸ்ட்ரால் சேர்க்கும் ஆபத்து உள்ளது. இது மட்டுமில்லாமல், "சி - சியாக்டிவ்' ப்ரோட்டீன் என்ற ஒரு தீய சத்தும், இதன் மூலம் உடலில் சேர்கிறது. இது தான் இதய பாதிப்புக்கு இன்னும் துணை போகிறது.


இதயத்தை தான் பாதிக்கிறது என்றால், ரத்தத்தில் உள்ள க்ளூக்கோஸ் அளவையும் அதிகரிக்க "டிரான்ஸ் பேட்' துணை போகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது.


எது தான் நல்லது?


பலருக்கும் எந்த எண்ணெய் தான் நல்லது என்று தெரியாமல் குழம்புகின்றனர். "பாலி அன் சாச்சுரேட்டட் பேட்டி ஆசிட் (புபா) உள்ள மக்காச்சோள அடிப்படையிலான எண்ணெய்கள், சன் பிளவர், ஆகியவற்றுடன், "மோனோ அன் சாச்சுரேட்டட் பேட்டி ஆசிட்' (முபா) கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், சோயா எண்ணெய் ஆகியவற்றை கலந்து பயன்படுத்துவது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.


இவற்றை எல்லாம் விட, ஆலிவ் எண்ணெய் மிகச் சிறந்தது; ஆனால், விலையும் கையை கடிப்பது தான்.


ஈசியான வழி இதோ


இப்போதுள்ள எண்ணெய் பழக்கத்தை கைவிட முடியாது தான்; ஆனால் , கட்டுப்படுத்திக்கொள்ளலாமே. இதோ சில வழிகள்:


* எண்ணெய்யை வாணலியில் ஊற்றி பொறிக் கும் போது, அதிக சூட்டில் வைக்க வேண்டாம்; தீப்பிடிக்கும் அளவுக்கு வைக்கவே வேண்டாம்.


* காய்ந்த எண்ணெயை மீண்டும் பயன் படுத்தவே கூடாது; இது தான் மிகப் பெரிய தவறு.


* பிளாஸ்டிக் பாட்டிலில் எண்ணெய், சூரிய வெளிச்சம் படும் வகையில் வைக்க வேண்டாம்.


* கரண்டியை பயன்படுத்தாமல், ஸ்பூனை வைத்து எண்ணெய் எடுத்து சமைக்கவும்.


* காய்கறிகளை வேகவைத்து, அதன் பின் சிறிய அளவு எண்ணெயில் வதக்கலாமே.


இப்படி செய்யுங்க முதலில்!


வாக்கிங் - ஜாகிங்


சிலருக்கு முழங்கால் மூட்டு வலி இருந்து கொண்டே இருக்கும்; இதைக் கால் வலி என்று தவறாக நினைத்துக்கொண்டிருப்பர்; அதற்காக, ஆங்கில மருந்து முதல் ஆயுர்வேத ஆயில் வரை பயன்படுத்துவர். எனினும், வலி தொடர்ந்து கொண்டிருக்கும். இதற்கு உண்மையான காரணம், மருத்துவ ஆலோசனை இல்லாமல், நானும் உடற்பயிற்சி செய்கிறேன் என்று ஜாகிங் கிளம்பிவிடுவது தான். மற்ற உடற்பயிற்சி போலத்தான் ஜாகிங்கும். ஆனால், எல்லா வயதினரும் இதை செய்யக் கூடாது; வாக்கிங் போகலாம்; ஜாகிங் என்றால் ,ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது டாக்டர்கள் கருத்து.

நாற்பது வயதுக்கு மேல் என்றால், ஜாகிங் செய்ய டாக்டரிடம் அனுமதி பெற வேண்டும். ரத்த அழுத்தம், ரத்த அளவு போன்றவையும் கூட இதனால் பாதிக்க வாய்ப்புண்டு. ஜாகிங்கை பல ஆண்டாக செய்து வருவோருக்கு பெரிய அளவில் பிரச்னை வராது. திடீரென ஆரம்பிப்போருக்கு தான் எல்லா கோளாறும் வரும். கால் மட்டுமல்ல, மூட்டு உட்பட உடலின் பல பகுதிகளை ஜாகிங் பாதிக்கும். ஜாகிங்கால், புத்துணர்ச்சியை ஊக்குவிக்கும் மூளையில் உள்ள என்டோர்பின் ரசாயனம் குறைந்து விடும். இதனால், பொதுவான சுறுசுறுப்பு குறைந்து விடும்.


ஜாகிங் போவதை விட, விறு விறுப்பாக "வாக்கிங்' போவதே நல்லது. அதனால், உடலில் கலோரி எரிக்கப்பட்டு, உடல் எடை குறைகிறது; பல வகையில் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.


பளபளக்க வேணுமா?
மார்ச் 28,2009,15:46 IST

பற்கள் பளபளக்கவில்லையே என்ற கவலை யாருக்கு தான் இல்லை. ஆனால், சிறிய வயதில் கண்டபடி பற்களை பராமரித்து விட்டு, திடீரென பளபளக்க வேண்டும் என்றால் கஷ்டம் தான். சிறிய வயதில் இருந்தே பராமரிப்பு முக்கியம். பற்களை பராமரிக்க இப்போது பல நவீன வழிகள் வந்து விட்டன. பல் நிபுணரிடம் போய், பற்களை சீராக்கி, பராமரிக்க துவங்கலாம். ப்ளீச்சிங், ப்ளாசிங் போன்ற முறைகளில் பற்களை முடிந்தவரை "பளபளக்க' செய்து, பராமரிக்கலாம்.

காலையில் பல் தேய்ப்பதே ஏதோ கடனுக்கு செய்வது தான் பலரும் செய்யும் தவறு. அதற்காக சில நிமிடம் ஒதுக்கி நன்றாக தேய்க்க வேண்டும்; அதற்காக அழுத்தி தேய்க்க வேண்டாம். இரவில் கண்டிப்பாக தேய்க்க வேண்டும்.


இனிப்புகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அப்படியே சாப்பிட்டாலும், பல் தேய்க்கும் போது, பற்களில் படிந்திருக்கும் அழுக்குகளை முழுமையாக நீக்கிக்கொள்ள வேண்டும். அதற்கு இரு முறை பல்தேய்ப்பது உதவும்.


நல்ல டூத் பேஸ்ட், நல்ல டூத் ப்ரஷ் முக்கியம். அதுபோல, சாப்பிட்ட பின் ஒவ்வொரு முறையும் பற்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பிஸ்கட், கூல் டிரிங்க் போன்றவற்றை குறைத்துக் கொண்டு பழங்களை, நார்ச்சத்து உள்ள காய்கறிகளை சாப்பிட்டால், பற்கள் பளபள தான்.



அதென்ன எமோஷனல் ஸ்ட்ரெஸ்? எதற்கெடுத்தாலும் அழுவது, குமுறுவது, கண்கலங்க டென்ஷன் ஆவது தான். சிறிய விஷயமாக இருந்தாலும், கண்களில் இருந்து "பொல பொல...' தான். இளம் வயதில் ஆரம்பிக்கும் இது, வயதான பின்னும் தொடரும். ஆளுமை குணம் இல்லாதவர்களுக்கு தான் இது அடிக்கடி வரும்.

எதிராளி சொல்வதை அப்படியே கேட்க வேண்டும் என்று இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு யோசனை இருக்கும்; தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் தன் கருத்தை சொல்லும் தைரியம் சிலருக்கு தான் உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பிரச்னை வராது.


எதையெடுத்தாலும், மனதில் போட்டு அழுத்தி வைத்திருந்து, கடைசியில் குமுறுவது தான் இப்படிப் பட்டவர்கள். இவர்கள் சரியாக வேண்டுமானால், மனோதத்துவ நிபுணரை ஆலோசிப்பது தான் நல்லது. கம்ப்யூட்டர் காலகட்டத்தில் இருக்கும் இப்போதைய இளம் தலைமுறையினருக்கு அசாத்திய திறமை இருந்தாலும், இப்படிப்பட்ட உணர்வுபூர்வ ஸ்ட்ரெஸ் இருக்கத்தான் செய்கிறது என்பது டாக்டர்களின் கருத்து.


காது: கேட்கும் சக்தி மனிதனுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம். இதன் முக்கியத்துவத்தை உணராமல் காது வலிதானே என்று அசட்டையாக இருந்து விட்டால் கடைசியில் உங்கள் வார்த்தைகளையே நீங்கள் கேட்க முடியாத பரிதாப நிலை உண்டாகி விடும். எனவே, பின்வரும் காது பிரச்னைகள் குறித்து கவனமாக இருக்கவேண்டும்.

நடுச்செவியில் நீர்க் கோர்வை: காது கேளாமை, காது வலி, தலைச்சுற்றல் உண்டாக்கும் சிறு வயதிலேயே காது கேளாமை ஏற்பட்டால் குழந்தையின் அறிவு வளர்ச்சியும் மொழி கற்கும் திறனும் பாதிக்கப் படும். நீண்ட நாட்களுக்கு நீர்க்கோவை இருந்தால் கொலஸ்டிடோமா எனும் எலும்பு அரிப்பு நோய் உருவாகி மூளை காய்ச்சல் ஏற்படும். இந்நோய் முற்றி கோமா நிலைக்கு மனிதர்களை தள்ளுகிறது.


இதற்கு கே.டி.பி. லேசர் கதிர் மூலம் செவிப்பறையில் 0.8 மி.மீ. துவாரம் இட்டு தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும். நடுச்செவியில் காற்று அழுத்தத்தை சமனாக்க சிறிய டுயூப் பொருத்தப்படும். நீர்க்கோர்வை முழுமையாக நீங்கி காது நன்றாக கேட்கும் போது இந்த டீயூப் தானாகவே வெளியே வந்து விடும். மாஸ்டாட்டோ டிம்பனோ பிளாஸ்டி என்னும் மைக்ரோ லேசர் சிகிச்சை மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு காணலாம். செவிப் பறை இற்று விட்டால் அவரவர் திசுவின் மூலமாகவே மாற்று செவிப்பறையை உருவாக்கலாம். நடுச்செவி எலும்புகள் இற்றுவிட்டால் 24 கேரட் தங்கத்தால் ஆன செயற்கை எலும்புகளை பொருத்தி மீண்டும் காது கேட்கும் திறனை பெற்றுக் கொள்ளலாம்.


தலைச்சுற்றல்: உள்காதில் உள்ள 3 அரைவட்டக் குழாய்களின் நீர்க் கோர்வை அதிகமானால் தலைச்சுற்றல், வாந்தி, காதில் இரைச்சல், காது கேளாமை ஆகிய பிரச்னைகள் உருவாகும். இது மீனியர்ஸ் என்னும் நோயின் அறிகுறி. இதனை தக்க மருந்து மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். உப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் தலைச் சுற்றலைக் கட்டுப்படுத்தலாம். இதன் மூலம் அரைவட்டக் குழாய்களிலுள்ள தலைச்சுற்றலுக்கு காரணமான குபுலா என்னும் நரம்பு மண்டலங்களை உணர்விழக்கச் செய்து நிரந்தர தீர்வு காண முடியும்.

காக்ளியர் இணைப்பு: முற்றிலும் காது கேட்கும் சக்தியை இழந்த குழந்தைகளுக்கு காக்ளியர் இம்ப்ளாண்ட் மூலம் அறுவை சிகிச்சை செய்து உரிய பேச்சுப் பயிற்சியை வழங்கினால் குழந்தைகளின் காது கேட்கும் சக்தியும், பேசும் திறனும் மேம்படும், தழும்பு, வீக்கம், வலி, முடி அகற்றுதல் எதுவுமின்றி குழந்தைகளுக்கு கேட்கும் திறன் எளிதில் கிடைக்கும். பெரியவர்களுக்கு பேச்சுப் பயிற்சி இல்லாமலேயே இப்பிரச்னையை தீர்க்கலாம். இந்த காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சையை மேற்கொள்ள முன்பெல் லாம் காதின் பின்புறத்தில் 15 சென்டி மீட்டர் அளவிற்கு அறுக்கப் பட்டது.


தற்போது வெறும் 3 சென்டி மீட்டர் நீளத்திலேயே தழும்பில்லாமல் மயக்க நிலையிலேயே நியூரல் டெலி மெட் என்னும் கம்ப்யூட்டர் சாதன உதவியுடன் காக்ளியர் இம்ப் ளாண்ட் எலக்ட்ரோட்ஸ் ஆகியவை சிறப்பாக இயங்குகின்றனவா என்பதை கண்டறிய முடியும். இரண்டு வாரங்களில் காது கேட்கும் சக்தியை பெற முடியும். பேசும் திறனையும் வளர்த்துக் கொள்ள முடியும்.


மூக்கு சைனஸ்: மூக்கின் அருகில் காற்று அறைகளில் சளி ஏற்பட்டு மூக்கு அடைப்பு உண்டாவதே சைனஸ், மூக்கை இரண்டாகப் பிரிக்கும் விட்டம் நடுவில் இல்லாமல் வளைந்து இருந்தால் சைனஸ் அறைகளில் சளி தேங்கும். சளியில் வளரும் பாக்டீரியா காரணமாக சீழ் உண்டாகி தலைவலி, காய்ச்சல் முக வீக்கம் தொண்டை வீக்கம், காது வலி, காது அடைப்பு உண்டாகும். இதனால் மூக்கில் இருந்து ரத்தத்துடன் சீழ் வடியும் நிலையும் ஏற்படும். இதற்கு கே.டி.பி. 532 லேசர் கருவி மூலம் எண் டோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை அல்லது செப் டோபிளாஸ்டி சிகிச்சை பெறலாம். தழும்போ, காயமோ ஏற்படாது.


பாலிப்ஸ்: தூசி மகரந்தம் பெட்ரோல் - டீசல் புகை ஆகியவை ஏற்படுத்தும் ஒவ்வாமை (அலர்ஜி) காரணமாக மூக்கில் பாலிப்ஸ் எனப்படும் சதை வளர்கிறது. இதனால் நுகர்வுத் தன்மை பாதிக்கப்படுகிறது. மூச்சுத்திணறல் ஏற்படலாம். எண்டாஸ்கோபி லேசர் அல்லது டெப்ரைடர் அறுவை சிகிச்சை மூலம் பாலிப்ஸ்களை அகற்றலாம். பின்னர் மாத்திரைகள் மூலம் ஒவ்வாமையைக் கட்டுப்படுத்தலாம்.


உருவ சீரமைப்பு: ரைனோபிளாஸ்டி எனப்படும் சிகிச்சை மூக்கின் உள்புறத்தில் சிகிச்சைகள் வழங்கி உருவத்தை மாற்றலாம். 18 வயதைக் கடந்தோருக்கு மட்டுமே இச்சிகிச்சையை வழங்க முடியும்.


தொண்டை டான்சில்ஸ்: ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நுண்கிருமி களின் தாக்குதலால் டான்சில் சதைகளில் சீழ் கோர்த்து காய்ச்சல் தொண்டை வலி ஆகியன உண்டாகின்றன. டான்சி லைட்டிஸ் காரணமாக மூட்டுவலி, இருதய நோய், சிறுநீரக கோளாறுகள் ஏற்படலாம். உரிய சமயத்தில் இதற்குச் சிகிச்சைப் பெற வேண்டும். மருந்துகளால் சரியாகவில்லை யெனில் கே.டி.பி. லேசர் மூலம் ரத்தக் கசிவு இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.


அடினாய்டு சதை வளர்ச்சி: மூக்கில் உள்ள திசுக்களின் அபரிமித வளர்ச்சி காரணமாக அடிக்கடி சளி பிடித்தல், மூக்கு அடைப்பு ஏற்பட்டு வாயில் மூச்சு விடுதல், காதில் சீழ் கோர்த்தல், காது கேளாமை குறட்டை மற்றும் சுவாசப பிரச்னைகள் உண்டாகலாம். இதன் காரணமாக மூளை மற்றும் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் வினியோகம் பாதிக்கப்பட்டு குழந்தைகளின் உடல் வளர்ச்சி பாதிக்கப்படும். எண்டாஸ் கோபிக் லேசர் அல்லது மைக்ரோ டெப்ரைடர் மூலமாக அடினாய்டு சதை வளர்ச்சியை நீக்க முடியும்.


குறட்டை: குறட்டை பிரச்னையை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். எல்.ஏ.யு.பி. என்னும் லேசர் சிகிச்சை மூலம் குறட்டையைக் குறைக்க முடியும். உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு எடைக்குறைப்பும் குறட்டையை குறைக்க முடியும்.

குரல்வளை: குரல் கரகரப்பு, இருமல், மூச்சுத் திணறல் ஆகியவை குரல் வளை நோயின் அறிகுறிகள். குரல் வளையில் உருவாகும் புற்றுக் கட்டி களையும் கே.டி.பி. லேசர் மூலம் குணப்படுத்த முடியும்.


குரல் மாற்று சிகிச்சை: குரல் நாண் நரம்பு பாதிக்கப்பட்டால் தைரோஸ்பிளாஸ்டி என்னும் குரல் மாற்றுச் சிகிச்சை மூலம் நிவர்த்தி செய்ய முடியும். இச்சிகிச்சையில் மருத்துவரிடம் பேசி கொண்டே வேண்டிய குரலை பெற முடியும். இனிமையான குரலையும் தேர்வு செய்யலாம். குரல் நாண்களில் திசுக்களை புகுத்தி கணீரென்ற குரல் வளத்தைப் பெற போனோ சர்ஜரிகள் கையாளப்படுகின்றன.

விக்ரம் இ.என்.டி.


ஹாஸ்பிடல் - ரிசர்ச் இன்ஸ்ட்டியூட்,


கோயமுத்தூர் - 2.


உர்ர்ர்ர்... வேணாமே!





"டிப்ரஷன்' ஆரம்பமே இது தான்

சோகம்; வருத்தம்; வேதனை; நோயால் பாதிப்பு; மன தளர்ச்சி என்று எது வேண்டுமானாலும், "டிப்ரஷன்' என்று மருத்துவ அகராதியில் கூறப்படுகிறது. சில காரணங்களால் "டிப்ரஷன்' வருகிறது என்று டாக்டர்கள் கூறினாலும், மனதை சரிசமமாக வைத்துக் கொள்ளாமல், எப்போதும் உர்ர்ர்ர்...என்றிருப்பதும் இந்த பாதிப்பின் அறிகுறியே!


எந்த ஒரு கோளாறும் , குறிப் பிட்ட காலத்துக்கு மேல் நீடிக்கக் கூடாது; அப்படியிருந்தால் ஏதோ பெரிய வியாதிக்கு அறிகுறி. அதுபோல, மனத்தளர்ச்சி எந்த உருவில் வந்தாலும், நாட்கணக்கில் நீடித்தால், கண்டிப்பாக அதை உடனே கவனிக்க வேண்டும்.


டிப்ரஷன் என்றால்...


டிப்ரஷன் என்றால், சோர்வு, வருத்தம், வேதனை என்று கூறலாம். ஆனால், மனதளவில் எந்த விதமான உணர்ச்சிகளும், அது இவற்றுக்கு வழி வகுத்தால் அது தான் டிப்ரஷன். சில சூழ்நிலைகள், சம்பவங்களால் டிப்ரஷன் வரலாம்.


ஆனால், எந்த காரணமும் இல்லாமல், எப்போதும் உர்ர்ர்ர்... என்றிருப்பதும் கூட டிப்ரஷனில் விட்டுவிடும் ஆபத்து உண்டு. தனக்கு நேர்ந்த நிலைமையால், எப்போதும் யாரிடமும் முகம் கொடுத்துபேசாமல் இருப்பது, சிரிக்கக்கூட யோசிப்பது, எந்த ஒரு விஷயத்திலும் மனம் ஒப்பாமை ஆகியவையும் கூட, மனத் தளர்ச்சியை ஏற்படுத்தும்.


இதனால், முகத்தில் புன்முறுவல் வராது;அப்படியே வந்தாலும், அதை அடக்கிக்கொண்டு விடுவர். அர்த்தமில்லாத கோபம் வரும்; தேவையில்லாத குழப்பம் வரும்; அதுவே டிப்ரஷனில் விட்டு விடும்; அதன் பின் கேட்கவே வேண்டாம்... ரத்த அழுத்தம்; சர்க்கரை நோய் , கதவை தட்ட ஆரம்பித்து விடும்.


எப்படி வருகிறது?


எல்லா நோய்களுக்கும் இருப் பது போல, இதற்கும் பரம்பரை பாதிப்பும் ஒரு காரணமாக உள்ளது; அதற்கு அடுத்து, வாழ்க்கையில் நேரும் நிகழ்வுகளை சொல்லலாம். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கோ, ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கோ டிப்ரஷன் வரலாம்.


மூளையில் உள்ள ஒரு வித ரசாயன மாற்றம் தான் டிப்ரஷனை அதிகப்படுத்துகிறது. ஆண்களை விட, பெண்களிடம் தான் அதிகமாக இந்த பாதிப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.


குறிப்பாக, மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு டிப்ரஷன் அதிகமாக நேர வாய்ப்பு உண்டு. மருத்துவ ரீதியான டிப்ரஷனும் கூட இவர்களுக்கு நேருவது உண்டு.


* பரம்பரையில் யாருக்காவது இருந் தால், வாரிசு வழியில் அது தொடர வாய்ப்பு உண்டு. மூன்று தலைமுறைக்கு முன் இப்படி ஒருவருக்கு இருந்தால், இந்த தலைமுறையில் ஒருவருக்கு நேரலாம்.


* பெற்றோர், உறவினர் உட்பட நெருங்கியவர்கள் மரணம் கணிசமான அளவில் டிப்ரஷனுக்கு காரணமாகிறது.


* புற்றுநோய் உட்பட சில நோய் பாதிப்பில் இருக்கும் நோயாளிகளுக்கு இது வரும். முதுமை நோய்க்கு டிப்ரஷனும் ஒரு அறிகுறி தான்.


* சில மருந்துகளின் பக்க விளைவுகளாலும் கூட இந்த பாதிப்பு வரும்.


* கோபம், ஆத்திரம், தோல்வி மனப்பான்மை போன்றவையும் டிப்ரஷனில் விட்டு விடும்.


அறிகுறிகள் எவை?


* ராத்திரி படுத்தால் தூக்கம் வராது; அடிக்கடி விழிப்பு வரும்; தூக்கம் தடை படும்.


* சோர்வு ஏற்படும்; சிறிய தூரம் நடந்து சென்று விட்டுவந்தால் கூட சோர்வு ஏற்படும்.


* அடிக்கடி தலைவலி வரும்.


* சிறிய விஷயங்களுக்கு கூட அழுகை வந்து விடும்; எப்போதும் ஒரு வித எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும்.


* பசி அறவே இருக்காது; அப்ப டியே பசிப்பதாக தட்டு முன் உட்கார்ந்தால், சாப்பிட பிடிக்காது.


* படிப்பிலும்,வேலையிலும் ஈடுபாடு காட்ட முடியாது; உடலில் ஒரு வித வலி இருந்துகொண்டே இருக்கும்.


* உடல் எடை சில சமயம் அதிகமாக இருக்கும்; சில சமயம், மிக குறைவாக இருக்கும்.


* மலச்சிக்கல் அடிக்கடி ஏற்படும். குற்ற மனப்பான்மை இருக்கும். "நாம் எதற்கும் லாயக்கில்லை' என்ற உணர்வு தலைதூக்கும்.


* தற்கொலை எண்ணம் மனதில் நிழ லாடும்; தற்கொலை முயற்சியும் செய்ய வைக்கும்.


கண்டுபிடிப்பது எப்படி?


டாக்டர் பரிசோதித்து, டிப்ரஷனுக்கு எது முக்கிய காரணமாக உள்ளது என்பதை கண்டுபிடிப்பார். அதன் பின், ரத்த பரிசோதனை எடுக்கப்படும். ரத்த சோகை, தைராய்டு போன்ற பிரச்னை இல்லை என்று தெரிந்தால், மனோதத்துவ நிபுணர் பரிசோதிப்பார்.


இரண்டு வாரம் தொடர்ந்து நோயாளியை பரிசோதித்தால், எதனால் டிப்ரஷன் என்பது சரியாக கணக்கிட முடியும். அதன் பின், சிகிச்சை முறை உறுதி செய்யப் படும்.


சிகிச்சை சுலபமே!


"ஆன்டி டிப்ரஷன்' மாத்திரைகள் உள்ளன;அவற்றை சில நாள் சாப்பிட்டு வந்தால், டிப்ரஷன் அளவு கண்டுபிடிக்க முடியும். இந்த மாத்திரைகளை சாப்பிட்டு வந்தால், இரண்டு வாரத்தில் அதன் குணம் தெரியும்; முதலில், நல்ல தூக்கம் வரும்; தூக்கப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மன திடத்தை ஏற்படுத்த சில உடல், மனது பயிற்சிகள் உள்ளன. தாழ்வு மனப்பான்மை, கோபம் எல்லாம் பறந்துவிடும். கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும்.